உஷார்!! அபராதம் பலமடங்கு!! இன்று இரவு 12 மணி முதல் புதிய வாகன சட்டம் அமல்

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய 2019 மோட்டார் வாகன (திருத்த) சட்டம் நாடு முழுவதும் அமல் செய்யப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2019, 01:57 PM IST
உஷார்!! அபராதம் பலமடங்கு!! இன்று இரவு 12 மணி முதல் புதிய வாகன சட்டம் அமல் title=

புதுடெல்லி: மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால், புதிய சட்டப்படி போக்குவரத்து விதிகள் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதால், அதனை கட்டுப்படுத்தவும், உயிர் இழப்பை தடுக்கவும் பழைய சட்டத்தில் சில முக்கிய திருத்தம் செய்யப்பட்டது. எவ்வளவு அபராதம்? இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? பார்போம்.

இந்தியாவில் 1939 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் முதன்முறையாக 1988 ஆம் அண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில்  சில மாறுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த மோடி தலைமையிலான மத்திய அரசு சில மாறுதல்களை செய்து மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா 2017 ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டது. ஆனால் மாநிலங்களவையில் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது. தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் அப்பொழுது சூலில் மசோதா நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்த மோடி தலைமையிலான அரசு 2019 மோட்டார் வாகன (திருத்த) மசோதாவை இருஅவைகளிலும் நிறைவேற்றியது.

இந்தநிலையில், 2019 மோட்டார் வாகன (திருத்த) மசோதாவில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்று பார்போம்.

> ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிப்பது

> ஓட்டுநர் உரிமம் காலவதியாகி ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒரு ஆண்டாக உயர்த்துவது. 

> தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க அனுமதி .

> மோட்டார் வாகன விபத்தில் மரணமடையும் வாகன உரிமையாளரோ அல்லது காப்பீடுதாரரோ ரூ.5 லட்சம் இழப்பீடும்.

> வாகன விபத்தில் படுகாயம் அடைபவர் ரூ.2.5 லட்சம் இழப்பீடும் பெறுவார்.

> போக்குவரத்து விதிகளை மீறிய அபராதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

> தற்போதைய நிலவரப்படி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் ரூ.100, அது திருத்தப்பட்ட மசோதாவின் படி ரூ.500 ஆக அதிகரிப்பு. 

> ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5,000. 

> காப்பீட்டு நகல் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2,000 அபராதம்.

> அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும். மசோதாவின் படி, அதிக வேகத்தில் ரூ.1,000 முதல் ரூ .2,000 வரை அபராதம் விதிக்கப்படும். 

> வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்

> ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

> சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவனது பாதுகாவலனும் வாகனத்தின் உரிமையாளரும் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள். அப்படி செய்பவர்களுக்கு ரூ.25,000 அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும்.

> வாகனங்களில் அதிக அளவில் சுமை கொண்டு சென்றல் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கலாம்.

> ஓட்டுநர் உரிம நிபந்தனைகளை மீறியதற்காக ரைடு-ஹெயிலிங் திரட்டிகளுக்கு ரூ.1 லட்சம் அபாரதம்.

> அதிவேகமாக வாகனம் ஓட்தினால் அபராதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை விதிக்கப்படும். 

> குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

Trending News