7th Pay Commission: ஜூலை முதல் ஊதியத்தில் பம்பர் ஏற்றம்... நாளை வரும் குட் நியூஸ்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஏஐசிபிஐ குறியீடு சென்ற மாதம் மீண்டும் ஒரு உயர்வை பதிவு செய்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2023, 08:20 AM IST
  • அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது பணவீக்க புள்ளிவிவரங்களைப் பொறுத்தது.
  • பணவீக்க விகிதத்தில் மத்திய பணியாளர்கள் பெறும் அலவன்ஸ்கள் கண்டிப்பாக அதிகரிக்கப்படும்.
  • மத்திய அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியில் 4 சதவீத உயர்வை பரிசாக வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: ஜூலை முதல் ஊதியத்தில் பம்பர் ஏற்றம்... நாளை வரும் குட் நியூஸ் title=

7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: அகவிலைப்படி உயர்வுக்காகக் காத்திருக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அவர்கள் மீண்டும் ஒரு பெரிய செய்தியைப் பெறப் போகிறார்கள். ஜூலை 1 ஆம் தேதி முதல் மத்திய ஊழியர்கள் சம்பள உயர்வைக் காணக்கூடும். இதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுகின்றன. 

ஏஐசிபிஐ குறியீடு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஏஐசிபிஐ குறியீடு சென்ற மாதம் மீண்டும் ஒரு உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த குறியீடு ஜனவரியில் 132.8 புள்ளிகளாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 0.1 புள்ளிகள் குறைந்து 132.7 புள்ளிகள் ஆனது. ஆனால், மார்ச் மாதத்தில், இந்த எண்ணிக்கை 0.6 புள்ளிகள் அதிகரித்து 133.3 புள்ளிகளை எட்டியது. அதேசமயம் ஏப்ரலில் ஏஐசிபிஐ புள்ளி 0.9 சதவீதம் அதிகரித்து 134.2 ஆக உள்ளது. இருப்பினும், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான  ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வரவில்லை. மீதமுள்ள நான்கு மாதங்களைப் போலவே இதுவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால் ஜூலை முதல் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என தெரிகிறது. மே மாத தரவுகள் நாளை, அதாவது ஜூன் 30 ஆம் தேதி வெளியிடப்படும். 

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது, முதலாவது ஜனவரியிலும் இரண்டாவது ஜூலையிலும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், வரும் ஜூலை மாதத்தில் டிஏ, டிஆர் அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது. இந்த சதவிகிதம் ஜனவரி 2023 முதல் பொருந்தும்.

பணவீக்க புள்ளிவிவரங்கள்

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது பணவீக்க புள்ளிவிவரங்களைப் பொறுத்தது. பணவீக்க விகிதத்தில் மத்திய பணியாளர்கள் பெறும் அலவன்ஸ்கள் கண்டிப்பாக அதிகரிக்கப்படும். ஜூலை மாதத்தில் மத்திய அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியில் 4 சதவீத உயர்வை பரிசாக வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி தற்போதைய 42 சதவீதத்தில் இருந்து நேரடியாக 46 சதவீதமாக உயரும்.

மேலும் படிக்க | ஜாக்பாட்!! மத்திய ஊழியர்களுக்கு முதலில் DA அதிகரிப்பு, இப்போது HRA 

டிஏ மற்றும் டிஆர் -இல் நான்கு சதவீத உயர்வை மத்திய அரசு தொடரலாம் என்ற யூகங்கள் உள்ளன. உண்மையில், மத்திய அரசு கடந்த இரண்டு முறைகளாக அகவிலைப்படியை தொடர்ந்து 4 சதவீதம் உயர்த்தி வருகிறது. முதல் முறையாக, ஜூலை 2022 டிஏ 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, மார்ச் 24, 2023 அன்று, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்குப் பிறகு டிஏ 38-ல் இருந்து 42 சதவீதமாக உயர்ந்தது. ஜூலை 2023 இல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தெரிந்துகொள்ள தற்போது ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

பணவீக்க நிலைமை மற்றும் இரண்டு மாதங்களுக்கான CPI-IW இன் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது ஜூலை மாதத்தில் அகவிலைப்படி எவ்வலவு அதிகரிக்கும் என்பதை யூகிக்க முடிகிறது என்றும், டிஏ மற்றும் டிஆர் 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். இது நடந்தால், 42 சதவீதத்தை எட்டியுள்ள அகவிலைப்படி, ஜூலையில் 46 சதவீதமாக உயரக்கூடும். எனினும், ஏஐசிபியை இன் புதிய புள்ளிவிவரங்கள் வந்த பிறகுதான், அரசாங்கம் அகவிலைப்படியை எவ்வளவு அதிகரிக்கும் என்பது முடிவு செய்யப்படும்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வுக்குப் பிறகு, 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் மீண்டும் ஒரு பெரிய அதிகரிப்பு இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. அகவிலைப்படி ஊழியரின் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டது. அகவிலைப்படி அதிகரிப்பதால், ஊழியர்களின் டேக்-ஹோம் சம்பளமும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | 8th Pay Commission: அடிப்படை சம்பளத்தில் 44% அதிரடி உயர்வு.. வருகிறது அடுத்த ஊதியக்குழு!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News