வெங்காயத்தை பதுக்கி வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை: அரசு எச்சரிக்கை!

வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது!!

Last Updated : Aug 22, 2019, 08:51 AM IST
வெங்காயத்தை பதுக்கி வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை: அரசு எச்சரிக்கை! title=

வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது!!

வெங்காயம்  உற்பத்தியில் முன்னிலையில் உள்ள மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விநியோகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உயர் மட்டக்குழு கூட்டத்தில் வெங்காய விலை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

வெங்காயத்தின் விலையை தொடர்ந்து கண்காணிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, லாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கூட்டத்துக்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, லாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பதின் அவசியம் குறித்து ஆராயப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Trending News