Credit Card Rules: கிரெடிட் கார்ட் விதிகளை மாற்றிய தனியார் வங்கிகள்!

Credit Card Rules: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் போன்ற வங்கிகளில் கிரெடிட் கார்ட் சம்பந்தமான விதிகளை மாற்றி உள்ளது.  இந்த மாற்றங்கள் வங்கிகளின் பயனர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.   

Written by - RK Spark | Last Updated : Jan 15, 2024, 11:16 AM IST
  • கிரெடிட் கார்டு விதிகளை மாற்றிய வங்கிகள்.
  • இனி சலுகைகள் குறைக்கப்பட உள்ளனர்.
  • பயனர்கள் இதனை தெரிந்து கொள்வது நல்லது.
Credit Card Rules: கிரெடிட் கார்ட் விதிகளை மாற்றிய தனியார் வங்கிகள்! title=

HDFC Bank Credit Card Rules: கிரெடிட் கார்ட் பயன்படுத்துவோர் என்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.  தற்போது அனைத்து நிறுவனங்களும் கிரெடிட் கார்டுகளை வழங்குவதில் போட்டி போடுவதால், வாடிக்கையாளர்கள் சலுகைகளை எதிர்பார்த்து உள்ளனர். ரிவார்டு புள்ளிகள் அல்லது சிறப்புச் சலுகைகள் எதுவாக இருந்தாலும், சிறந்த கிரெடிட் கார்டைக் கண்டறிவதன் மூலம், ஒவ்வொரு முறையும் நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது அதிக சலுகைகளையும் ரிவார்டு புள்ளிகளையும் பெறலாம். கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பலவிதமான சலுகைகளை வழங்குகின்றன. 

மேலும் படிக்க | RBI: ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை! இந்த வங்கியின் உரிமம் ரத்து!

எனவே, கிரெடிட் கார்டுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் கவனமாக ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். சில வகையான கிரெடிட் கார்டுகளுக்கு ஏற்ப ஷாப்பிங் செய்தால், அதிக கேஷ்பேக், தள்ளுபடிகள் அல்லது சலுகைகளைப் பெற முடியும். சமீபத்தில் பல பொது மற்றும் தனியார் வங்கிகள் கிரெடிட் கார்ட் தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்களை கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டும்.  எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஹெச்டிஎஃப்சி வங்கி Regalia மற்றும் Millennia கிரெடிட் கார்டுகளின் விதிகளை மாற்றியுள்ளது. Regalia கார்டுகளுக்கான லவுஞ்ச் அணுகலுக்கான விதிகள் டிசம்பர் 1, 2023 முதல் மாற்றப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, கிரெடிட் கார்டு செலவின் அடிப்படையில் லவுஞ்ச் அணுகல் திட்டம் இருக்கும். ஒரு காலண்டர் காலாண்டில் ரூ. 1 லட்சத்திற்கு மேல் செலவழித்தால், இரண்டு லவுஞ்ச் அணுகல் வவுச்சர்களைப் பெறுவீர்கள். இதேபோல், ஹெச்டிஎஃப்சி Millennia கார்டு மூலம் ஒவ்வொரு காலாண்டிலும் ரூ. 1 லட்சம் செலவழித்தால், நீங்கள் லவுஞ்ச் அணுகலைப் பெறுவீர்கள்.

எஸ்பிஐ கிரெடிட் கார்டின் படி, பேடிஎம் எஸ்பிஐ கிரெடிட் கார்டின் விதிமுறைகளை மாற்றியுள்ளது. ஜனவரி 1 முதல் இந்தக் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், கேஷ்பேக் கிடைக்காது. முன்னதாக நவம்பர் 1 ஆம் தேதி, ஈஸி டைனரின் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான ரிவார்டு புள்ளிகளை எஸ்பிஐ கார்டு 10X லிருந்து 5X ஆகக் குறைத்தது. 

கிரெடிட் கார்ட் சம்பந்தமாக ஆக்சிஸ் வங்கி சில முக்கிய மாற்றங்களையும் செய்துள்ளது. ஆக்சிஸ் வங்கி, மேக்னஸ் கிரெடிட் கார்டின் வருடாந்திர கட்டணம் மற்றும் சேரும் பரிசு ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்துள்ளது. ஆக்ஸிஸ் வங்கி ரிசர்வ் கிரெடிட் கார்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளிலும் வங்கி மாற்றங்களைச் செய்துள்ளது.

விமான நிலைய லவுஞ்ச் அணுகல் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கார்டுகளின் வெகுமதி புள்ளிகள் தொடர்பான விதிகளில் ஐசிஐசிஐ வங்கி விரைவில் மாற்றங்களைச் செயல்படுத்த உள்ளது. ஐசிஐசிஐ வங்கி இணையதளத்தின்படி, ஏப்ரல் 1, 2024 முதல் முந்தைய காலண்டர் காலாண்டில் ரூ.35,000 செலவழித்தால் விமான நிலைய லவுஞ்ச் அணுகலைப் பெறலாம். 

மேலும் படிக்க | மூத்த குடிமக்கள் கை நிறைய வருமானம் பெறலாம்.. இதை மட்டும் செய்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News