இயற்கையின் அழகை ரசிக்க இமாச்சலப் பிரதேசம் செல்லுங்கள்...

இமாச்சலப் பிரதேசம் எப்போதுமே ஒரு சுற்றுலாத் தலத்தின் மிகப்பெரிய மையமாக இருந்து வருகிறது. இமாச்சலில் பனிப்பொழிவு ஏற்பட்டவுடன் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப் பிரதேசத்திற்கு புறப்படுகிறார்கள். பனிப்பொழிவு பருவம் வரும்போதெல்லாம் சுற்றுலா பயணிகள் இங்கு செல்வது வழக்கம்.

Last Updated : Jan 26, 2020, 08:08 PM IST
இயற்கையின் அழகை ரசிக்க இமாச்சலப் பிரதேசம் செல்லுங்கள்... title=

இமாச்சலப் பிரதேசம் எப்போதுமே ஒரு சுற்றுலாத் தலத்தின் மிகப்பெரிய மையமாக இருந்து வருகிறது. இமாச்சலில் பனிப்பொழிவு ஏற்பட்டவுடன் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப் பிரதேசத்திற்கு புறப்படுகிறார்கள். பனிப்பொழிவு பருவம் வரும்போதெல்லாம் சுற்றுலா பயணிகள் இங்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் சிம்லா அல்லது பிற நகரங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இமாச்சல அரசு சில பரிசுகளை வழங்க வேண்டும் என்று அனைத்து சுற்றுலாப் பயணிகளும் விரும்புகிறார்கள். இந்த முறை இதேபோன்ற ஒரு விஷயம் நடந்துள்ளது. ஆம்., இந்த முறை இந்தியன் ரயில்வே கல்கா-சிம்லாவில் வெளிப்படையான ரயிலான இமாச்சல தர்ஷன் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயில் மூலம் சுற்றுலா பயணிகள் அனைத்து இயற்கை காட்சிகளையும் வண்டிக்கு உள் இருந்தே அனுபவிக்க முடியும்.

கல்காவிலிருந்து சிம்லா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில்வே மற்றொரு நல்ல செய்தியை அளித்துள்ளது. கல்கா முதல் சிம்லா வரை ஹிமா தர்ஷன் எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே தொடங்கியுள்ளது, இது உங்களுக்கு அற்புதமான காட்சிகளின் மகிழ்ச்சியைத் தரும். இந்த ரயில் முற்றிலும் வெளிப்படையானது. இது கல்காவிலிருந்து சிம்லாவுக்கு செல்லும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கல்கா-சிம்லா இடையே கண்ணாடி கூரை கொண்ட இமாச்சல தரிசன எக்ஸ்பிரஸை வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி இம்மாதம் முற்பகுதியில் தொடங்கி வைத்தார். இமாச்சலத்தை ஒரு சுற்றுலாத் துறையாக வளர்க்க ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ரயில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் 7 விஸ்டாடோம் பெட்டிகள் (கண்ணாடி கூரை பெட்டிகள்) சேர்க்கப்பட்டுள்ளன.

Trending News