Happy Friendship Day 2018: நண்பன் பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்!!

"நட்பின்றி அமையாது மகிழ்ச்சி" என்ற புதுமொழியுடன் அனைவருக்கும் ஜீ-தமிழின் நண்பர்கள் தின வாத்துக்கள்!!

Last Updated : Aug 5, 2018, 11:47 AM IST
Happy Friendship Day 2018: நண்பன் பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்!! title=

"நட்பின்றி அமையாது மகிழ்ச்சி" என்ற புதுமொழியுடன் அனைவருக்கும் ஜீ-தமிழின் நண்பர்கள் தின வாத்துக்கள்!!

மனிதர்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து உயிருள்ள ஜீவராசிகளுக்கும் நட்பு என்பது உண்டு. அத்தகைய நண்பர்களின் அன்பை சொல்லும் தினம் தான் இன்று...

நீரியின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் "நட்பின்றி அமையாது மகிழ்ச்சி" எனும் புதுமொழி. அதனால் தான் "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என வள்ளுவ பெருந்தகையும் நட்புக்கு தனி அதிகாரம் அமைத்து கொண்டாடியுள்ளார். 

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 1935 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
இந்த பரந்த உலகமே நட்பு எனும் நூலில் தான் கட்டப்பட்டுள்ளது. பெற்றோர், கணவர், மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத சில ரகசியங்கள் தோழன் அல்லது தோழியிடம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி, சுயநலம் கருதாது உண்மையான பாசத்தை அள்ளித் தருவதில் நட்புக்கு வேறு உறவுகள் நிகரில்லை என்றே கூறலாம். அப்படியான நட்பின் தனித்துவத்தை திருவள்ளுவரும் தனி அதிகாரம் மூலம் கூறியுள்ளார்.

நாம் நமது வாழ்வில் பலரை சந்தித்திருப்போம் ஆனால் அனைவரும் நமக்கு நல்ல நண்பன் என்று கூற முடியாது. நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் நமது நண்பனிடம் அதை பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வை விட நிம்மதி வேறு எதுவும் கிடையாது. நாம் நமது பெற்றோருடன் பகிர முடியாத சில விசயங்களை நமது நண்பனிடம் பகிர்ந்து கொள்கிறோம். ஏன் என்றார் நம்பிக்கை என்ற மருவார்த்தையின் உருவம் தான் நண்பன்.    

வீட்டுக்கு, நாட்டுக்கு, ஊருக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லையே கிடையாது. அனைவரது வாழ்விலும் ஸ்கூல் பிரண்ட், காலேஜ் பிரண்ட், விடுதி பிரண்ட், ஆபீஸ் பிரண்ட், பஸ் பிரண்ட், டிரெயின் பிரண்ட் (Train) ஏன் சீரியல் பிரண்ட் என நண்பர்களின்  பட்டியல் முடிவுறாமல் நீள்கிறது. நம் சந்தோஷங்களை பல மடங்காக அதிகரிக்கவும், துன்பங்களை தூர விலக்கவும் நமக்கு எப்போதும் ஒரு நட்பு தேவைப்படுகிறது.

90-களில் க்ரீட்டிங் கார்டு, ஃப்ரண்ட் ஷிப் பேண்ட் என திருவிழா கோலமாக கொண்டாடப்பட்ட நண்பர்கள் தினம், இன்றைய தொழில் நுட்பத்தால் வாட்ஸ் அப்பில் மெசெஜ் செய்வது, ஃபேஸ்புக்கில் டேக் செய்து விடுவது, இன்ஸ்டாவில் போட்டோ போடுவது என வேறு பரிமாணத்திற்கு மாறியுள்ளது. மாற்றங்கள் பல நேர்ந்தாலும் நட்பை அழிக்க யாராலும் முடியாது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் நன்றாக உணர்ந்துள்ளனர்.

ஜீ-தமிழின் சார்பாக அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!! 

 

Trending News