பிலவ ஆண்டின் கடைசி திங்கட்கிழமை ஏப்ரல் 11ம் நாளின் ராசிபலன்கள்

பிலவ ஆண்டின் கடைசி திங்கட்கிழமை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 10, 2022, 09:28 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை தரும் நாள்
  • மிதுன ராசிக்காரர்களுக்கு மனதில் மகிழ்ச்சி பொங்கும் .
  • நிதானமாக இருக்க வேண்டியது சிம்ம ராசிக்காரர்கள்
பிலவ ஆண்டின் கடைசி திங்கட்கிழமை ஏப்ரல் 11ம் நாளின் ராசிபலன்கள் title=

இன்னும் சில நாட்களில் தமிழ் புத்தாண்டு தொடங்கவிருக்கிறது. அதோடு ஏப்ரல் மாதத்தில் பல பெரிய கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படப் போகிறது. இந்த நிலையில் இந்த தமிழாண்டின் கடைசி திங்கட்கிழமை (2022, ஏப்ரல் 11) எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கவுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். 

மேஷம்: குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

ரிஷபம் - தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் ஏமாற்றம் ஏற்படலாம், ஆனால்  நிதானமாக இருங்கள். உணவில் ஆர்வம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் குரு: ஏப்ரல் முதல் இந்த ராசிகளுக்கு ஒவ்வொரு நாளும் வரப்பிரசாதம்தான் 

மிதுனம் - கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

கடகம் - உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.  பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம் - மனதில் அமைதி ஏற்படும். பொறுமை குறையும். மனம் கலங்கலாம். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி - பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தை மேம்படுத்த தந்தையிடமிருந்து பணம் கிடைக்கும்.  

மேலும் படிக்க | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

துலாம் துலா ராசிக்காரர்களுக்கு மனரீதியான பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். பணியிடத்தில் உழைப்பு அதிகரித்தாலும் மதிப்பும் உயரும். வாழ்க்கைத்துணையிடம் சற்று கவனமாக இருக்கவும்.  

விருச்சிகம் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் உடல்நிலை மேம்படும். வருமானம் அதிகரிப்பதால் செலவுகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம். சேமிப்பு அவசியம்

தனுசு – படிப்பில் மேன்மை மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. வருமானம் அதிகரிக்கும் என்றாலும் செலவும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும். 

மகரம் - உடல்நிலையில் ஏற்ற தாழ்வுகள் காணப்படும். பணியிடத்தில் அதிகாரிகளின் நல்லெண்ணத்தைப் பெறலாம். கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

கும்பம் - நல்ல காலம் பிறந்துவிட்டது. உத்தியோகத்தில் முன்னேற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். குடுபத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும், அதற்கேற்றாற்போல செலவும் அதிகமாக இருக்கும்.

மீனம் மீன ராசிக்காரர்கள் இனி வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கலாம், ஆனால் அதற்கு வாயைக் கட்டுப்படுத்துவது அவசியம். அதிகப்படியான கோபத்தையும் ஆர்வத்தையும் தவிர்க்கவும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | கிரகநிலைகளில் பெரும் மாற்றம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News