Indian Railways: விளையாட்டுக்கு கூட இதையெல்லாம் செய்யாதீங்க... அப்புறம் ஜெயில் தான்!

Indian Railways: ரயில்களின் ஏசி பெட்டிகளில் பெட்ஷீட்கள், தலையணைகள் போன்ற பொருள்கள் அதிகமாக திருடப்படுவதையொட்டி, இந்திய ரயில்வே துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 21, 2023, 06:42 AM IST
  • பொருள்கள் திருடப்படுவதால், ரயில்வே துறைக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம்.
  • பெட்ஷீட், போர்வைகள், ஸ்பூன்கள், கெட்டில்கள், குழாய்கள் உள்ளிட்டவை திருடப்படுகின்றன.
  • இதற்கு, அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
Indian Railways: விளையாட்டுக்கு கூட இதையெல்லாம் செய்யாதீங்க... அப்புறம் ஜெயில் தான்! title=

Indian Railways New Guidelines: ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில்வே பெட்ஷீட்கள், துண்டுகள் மற்றும் தலையணைகளை வழங்குகிறது. ஆனால் இப்போதெல்லாம் பயணிகள் இந்த ரயில்வே பொருட்களையும் தங்கள் வீட்டிற்கு எடுத்து செல்லும் நிலையில், ரயில்வே துறை அதன் விதிகளில் சில மாதங்களுக்கு முன் பெரிய மாற்றத்தை செய்தது.

பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே செய்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயில்வேயால் பலனடைகின்றனர். குறிப்பாக, ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பெட்ஷீட்கள், தலையணைகள் போன்ற வசதிகளை ரயில்வே வழங்குகிறது. ஆனால் இப்போதெல்லாம் பயணிகள் இந்த ரயில்வே பொருட்களையும் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இதனால், சில மாதங்களுக்கு முன் ரயில்வே தனது விதிகளில் பெரிய மாற்றங்களை கொண்டுவந்தது. இனிமேல் பயணிகள் யாரேனும் பொருட்களை திருடினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என ரயில்வே தெரிவித்தது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

இது தொடர்பான முழுமையான வழிகாட்டுதலையும் ரயில்வே வெளியிட்டது. ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு இந்த வழிகாட்டுதலை ரயில்வே துறை அறிவித்தது. பயணிகளின் இந்த அறமற்ற செயல்களால் ரயில்வே மிகவும் கலக்கமடைந்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | இந்திய ரயில்வே குறித்து நீங்கள் அறியாத ‘சில’ சுவாரஸ்ய தகவல்கள்!

ரயில்வேக்கு லட்சக்கணக்கில் இழப்பு

பயணிகளின் இந்த செயல்களால், இந்தாண்டு ரயில்வே துறைக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பெட்ஷீட், போர்வைகள் மட்டுமின்றி, ஸ்பூன்கள், தண்ணீரை சூடாக்கும் கெட்டில்கள், குழாய்கள், கழிப்பறை கிண்ணங்கள் போன்றவற்றை பயணிகள் திருடுவதால், ரயில்வேக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 

எந்த வழிதடத்தில் அதிகம் திருடுப்போகின்றன?

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மண்டலத்தில் உள்ள ரயில்களில் ரயில்வே பொருட்களை மக்கள் கடுமையாக திருடி வருகின்றனர். பிலாஸ்பூர் மற்றும் துர்க்கில் இருந்து இயக்கப்படும் நீண்ட தூர விரைவு ரயில்களில் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், முகத்துண்டுகள் ஆகியவை தொடர்ந்து திருடப்படுகின்றன.

4 மாதங்களில் 55 லட்சம் திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், பிலாஸ்பூர் மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் கடந்த 4 மாதங்களில் சுமார் 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளது. அந்த 4 மாதங்களில் ரூ.55 லட்சத்து 97 ஆயிரத்து 406 மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

எவ்வளவு திருட்டு நடந்தது?

அந்த நான்கு மாதங்களில் 12 ஆயிரத்து 886 முக துண்டுகள் திருடப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.5,59,381 ஆகும். அதே நேரத்தில் ஏசியில் பயணம் செய்த பயணிகளால் 4 மாதங்களில் 18 ஆயிரத்து 208 பெட்ஷீட்கள் திருடப்பட்டுள்ளன. இதன் விலை சுமார் ரூ.28, 16, 231 ஆகும். இதுதவிர, 19 ஆயிரத்து 767 தலையணை கவர்கள் திருடப்பட்டுள்ளன, இவற்றின் விலை ரூ.10,14,837 ஆகும். 2 ஆயிரத்து 796 போர்வைகள் ரூ.11,71,999. 312 தலையணைகள் ரூ.34 ஆயிரத்து 956 ஆகும்.

இது குறித்து தகவல் அளிக்கும் போது, இவ்வாறு பொருட்களை திருடுவது சட்டப்படி தவறு என ரயில்வே தெரிவித்துள்ளது. இதுபோன்ற பயணிகள் மீது ரயில்வே சொத்து சட்டம் 1966இன் கீழ் ரயில்வே நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பயணிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனையும் விதிக்கப்படும். இதில், குற்றம் செய்தோருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ரயில்வே ஸ்டேஷன் ஒன்று... ஆனால் மாநிலங்கள் இரண்டு... இந்தியாவின் வினோத ரயில் நிலையம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News