7 முட்டைகள் போட்ட மலைப்பாம்பு: இதல்ல செய்தி.. இதுல இருக்கு ஒரு ட்விஸ்ட்..!!!

62 வயதான மலைப்பாம்பு  7 முட்டைகள் போட்டது என்பது ஒரு சாதாரண செய்தி தான். ஆனால், இதில் இரு அசாதாரணமான அம்சங்கள் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2020, 04:18 PM IST
  • 62 வயதான மலைப்பாம்பு 7 முட்டைகள் போட்டது என்பது ஒரு சாதாரண செய்தி தான். ஆனால், இதில் இரு அசாதாரணமான அம்சங்கள் உள்ளன.
  • மிருகக்காட்சிசாலையில் ஆவணப்படுத்தப்பட்ட மிகவும் வயதான பாம்பு இது என மிருக காட்சி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
  • 1961 ஆம் ஆண்டில் மிருகக்காட்சிசாலைக்கு இந்த பெண் மலைப்பாம்பை தனிப்பட்ட வகையில் ஒருவர் கொடுத்தார்.
7 முட்டைகள் போட்ட  மலைப்பாம்பு: இதல்ல செய்தி.. இதுல இருக்கு ஒரு ட்விஸ்ட்..!!! title=

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் மிருகக்காட்சிசாலையின்  உள்ள ஒரு மலைப்பாம்பு 7 முட்டைகளை போட்டது. இதில் உள்ள அசாதாரணமான விஷயம் என்ன்வென்றால், இந்த 62 வயதான மலைப்பாம்பு, சுமார் 20 ஆண்டுகள் ஆண் மலைப்பாம்பின் பக்கம் கூட போகவில்லை.

மிருககாட்சி சாலையில் உள்ள வல்லுநர்கள் இது எப்படி நேர்ந்தது என வியந்துள்ளனர். மிருகக்காட்சிசாலையின் மேலாளர் மார்க் வன்னர்,  சில மலைப் பாம்புகள் சில நேரங்களில் விந்தணுக்களை சேமித்து வைக்கும் திறன் பெற்றது, என்றாலும், முட்டையிட்டுள்ள இந்த குறிப்பிட்ட வகை மலைப்பாம்பு அவ்வாறு செய்யும் திறன் பெற்றது இல்லை என்கிறார். 

இதில் உள்ள மற்றொரு அசாதாரணமான விஷயம் என்றால்,  ஏனென்றால் பந்து மலைப்பாம்புகள் வழக்கமாக 60 வயதை எட்டுவதற்கு முன்பே முட்டையிடுவதை நிறுத்துவிடும் என மிருக காட்சி சாலையில் உள்ள வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

முட்டையிட்ட மிகவும் வயதான பாம்பு என வரலாற்றில் இந்த தகவல் பதிவு செய்யப்படும் என மிருகக்காட்சிசாலையின் மேலாளர் மார்க் வன்னர், மேலும் கூறினார்.

அமெரிக்காவின் மிருகக்காட்சிசாலையில் ஆவணப்படுத்தப்பட்ட மிகவும் வயதான பாம்பு இது தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மலைப்பாம்பு, ஜூலை 23 முட்டைகளை இட்டது. மூன்று முட்டைகள் இன்குபேட்டரில் உள்ளன, இரண்டு மரபணு மாதிரிக்கு பயன்படுத்தப்பட்டன. மற்ற இரண்டு முட்டைகளில் பாம்புகள் உயிருடன் இல்லை என அவர் குறிப்பிட்டார். 

 உயிருள்ள  முட்டைகள் சுமார் ஒரு மாதத்தில் குஞ்சு பொரிக்க வேண்டும்.மரபணு மாதிரியாக வைக்கப்பட்டுள்ள முட்டைகளை ஆராய்ந்தால், பாலியல் ரீதியாக இனப்பெருக்க ஆனதா அல்லது அசாதாரணமான முறையில் இனப்பெருக்கம் ஆனாதா என்பதைக் கண்டறியலாம்.

மேலும் படிக்க | மாலத்தீவுகளின் அழிவு நெருங்கி விட்டதா... அதிர்ச்சித் தகவல்..!!!

1961 ஆம் ஆண்டில் மிருகக்காட்சிசாலைக்கு இந்த  பெண் மலைப்பாம்பை தனிப்பட்ட வகையில் ஒருவர் கொடுத்தார். 2009 ஆம் ஆண்டு இது சில முட்டைகளை ஈன்றது. ஆனால், அது எதுவும் உயிருடன் இல்லை.  1990 மீண்டும் இது முட்டைகளை ஈன்றது. இரு முறையும் அது சேர்க்கையின் மூலம் தான் தரித்தது.

 ஏனெனில் சில நேரத்தில், ஆண் மற்றும் பெண் பாம்புகள் வாளிகளில் ஒன்றாக வைக்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டில், "அனகோண்டா முட்டைகள்" காஷ்மீரிலும் காணப்பட்டன. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஒருவர் 'பிரேசிலின் வைல்ட் லைஃப் துறை' என்று குறிக்கப்பட்ட ஒரு மர்மமான பையை கண்டுபிடித்தார். அந்த பையில் அனகோண்டா முட்டைகள் இருப்பதாக அவர் கூறினார். காஷ்மீரில் பாம்புகள் பொதுவானவை என்றாலும், அனகோண்டா முட்டைகளை பார்ப்பது ஒரு புதிய மற்றும் விசித்திரமான நிகழ்வு என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | https://zeenews.india.com/tamil/lifestyle/is-the-destruction-of-the-maldives-is-nearing-shocking-news-342977

Trending News