வீட்டின் பூஜை அறையில் இரண்டு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்

பூஜை அறையில், விளக்கு ஏற்றுவது என்பது அனைவர் வீட்டிலும் கடைபிடிக்கும் பழக்கம், சிலர், ஒரு விளக்கை ஏற்றுவார்கள். சிலர் இரு விளக்கை ஏற்றுவார்கள். அனைத்துமே வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வரக் கூடியவை.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 6, 2021, 11:51 PM IST
  • நல்ல எண்ணெய் அல்லது விளக்கு எண்ணெய் அல்லது நெய் போன்றவற்றை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம்.
  • இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். விளக்கை கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்.
  • நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
வீட்டின் பூஜை அறையில் இரண்டு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள் title=

பூஜை அறையில், விளக்கு ஏற்றுவது என்பது அனைவர் வீட்டிலும் கடைபிடிக்கும் பழக்கம், சிலர், ஒரு விளக்கை ஏற்றுவார்கள். சிலர் இரு விளக்கை ஏற்றுவார்கள். அனைத்துமே வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வரக் கூடியவை. 

வீட்டில் சந்தோஷமான நிறைவான வாழ்க்கை இருக்க வேண்டுமானால், நோய் நொடி ஏதும் இல்லாத வாழ்க்கை, பசியாற நல்ல உணவு, செல்வம் என்பவை தேவை. இதில் அனைத்திலும் மகாலட்சுமி உறைந்து இருக்கிறாள். பூஜை அறையில் ஒற்றை விளக்கை ஏற்றாமல் இரண்டு விளக்கை ஏற்றுவதால் எப்போதும் வளமும், அதிர்ஷ்டமும், நோய் இல்லாத வாழ்வும் அமையும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஒளி நிறைந்துள்ள இடத்தில் அதிக அளவில் நேர்மறை ஆற்றல்கள் இருக்கும். பூஜை அறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருப்பது வீட்டிற்கு மிகவும் நல்லது.

ALSO READ | எடுத்த காரியத்தை கைகூட செய்யும் பீஜ அட்சர மந்திரங்கள்

நல்ல எண்ணெய்  அல்லது விளக்கு எண்ணெய் அல்லது  நெய் போன்றவற்றை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். பொதுவாக பூஜை அறையில்  இரட்டை விளக்கு ஏற்றினால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என கூறுவார்கள். அவை இரண்டும் ஒரே மாதிரியான விளக்காக இருக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை. உங்கள் வசதிப்படி, வீட்டில் இருக்கும் ஏதேனும் இரண்டு விளக்கை பயன்படுத்தலாம்.
 
பூஜையறையில் தவறாது, தினமும் காலை, மாலை இரு வேளையும்  எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.  விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற அந்த நேரத்தில், இரவின் விடியலாகத் திகழும் தருணம்,  என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகங்களையும் பெறலாம்.

இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். விளக்கை கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான  பலன்களை அடையலாம்.
 
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும். வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். 
 
எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் உறுதியும், தெளிவும்  ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

ALSO READ | புத்திர பாக்கியம் இல்லையா; குழந்தை செல்வத்தை அருளும் திருவாலங்காடு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News