நாஜிகளால் சூறையாடப்பட்ட (11,000 கோடி மதிப்புள்ள) கலைப்பொருட்கள் மீட்பு...

திடுக்கிடும் ஒரு வெளிப்பாட்டில், ஆராய்ச்சியாளர்கள் 16 ஆம் நூற்றாண்டின் ஜெர்மன் கோட்டையை அடையாளம் கண்டுள்ளனர்.

Last Updated : May 28, 2020, 04:46 PM IST
நாஜிகளால் சூறையாடப்பட்ட (11,000 கோடி மதிப்புள்ள) கலைப்பொருட்கள் மீட்பு... title=

திடுக்கிடும் ஒரு வெளிப்பாட்டில், ஆராய்ச்சியாளர்கள் 16 ஆம் நூற்றாண்டின் ஜெர்மன் கோட்டையை அடையாளம் கண்டுள்ளனர்.

இது இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பா முழுவதிலும் இருந்து நாஜிகளால் எடுத்துச் செல்லப்பட்ட 28 டன் தங்கம் மற்றும் பிற பொக்கிஷங்களை உள்ளடக்கியது ஆகும். இந்த புதையல் 1.25 பில்லியன் இங்கிலாந்து பவுண்டுகள் (இந்திய 11,617 கோடிக்கு மேல்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

நவீனகால போலந்தில் அமைந்துள்ள ஹோட்ச்பெர்க் அரண்மனை 11 இடங்களில் ஒன்றாகும், இது நாஜி இராணுவ அதிகாரி எஸ்.எஸ். ஸ்டாண்டர்டென்ஃபுரர் எகோன் ஒலன்ஹவுரின் நாட்குறிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. டைட்டியின் இருப்பு கடந்த ஆண்டு மட்டுமே தெரியவந்தது என்று ஸ்பூட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.

டைரியைக் கைப்பற்றிய சிலேசிய பிரிட்ஜ் அறக்கட்டளை, ப்ரெஸ்லாவின் (WWII-க்குப் பிறகு போலந்திற்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜெர்மன் நகரம்) ரீச்ஸ்பேங்க் தங்கக் கம்பிகள் மற்றும் பிற பொக்கிஷங்கள் இன்றைய டாலர்களில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள கோட்டையின் கீழ் புதைக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அறக்கட்டளையின் தலைவரான ரோமன் ஃபுர்மனியாக், கடந்த ஆண்டு போலந்து கலாச்சார அமைச்சகத்திற்கு இந்த நாட்குறிப்பை வழங்கியதாகக் கூறினார், ஆனால் அவர்கள் அதை இன்னும் சரிபார்க்கவில்லை. விசாரணையைத் தொடங்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், கண்டுபிடிப்புகளுடன் பொதுமக்கள் செல்ல முடிவு செய்தது.

அரசாங்கத்தின் அனுமதியின்றி ஒரு அகழ்வாராய்ச்சிக்கு திட்டமிடுவதும், அகழ்வாராய்ச்சிக்கு நிதியுதவி பெறுபவர்களைப் பெறுவதும் ஒரு மகத்தான பணியாக நிரூபிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், கோட்டையின் தற்போதைய உரிமையாளர் தனது அனுமதியை அளித்துள்ளதாகவும், ஒரு சுற்றளவு வேலி அமைத்து, அந்த இடத்தை சுற்றி வருவதாக எதிர்பார்க்கப்படும் புதையல் வேட்டைக்காரர்களைத் தடுக்க சொத்தை சுற்றி CCTV கேமராக்களை நிறுவியதாகவும் அறக்கட்டளை கூறுகிறது.

போலந்து, சோவியத் யூனியன், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகியவற்றின் மத கலைப்பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகள் நாஜிகளால் சூறையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த புதையல்கள் டைரியின் படி குறைந்தபட்சம் 11 இடங்களில் மறைத்து வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மொழியாக்கம் - அரிஅரன் (நகரி)

Trending News