பாவங்கள் போக்கி தூய்மை செய்யும் சர்வ ஏகாதசி விரதம்!

ஏகாதசி என்பது விஷ்ணு பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஏகாந்த தினமாகவே இருக்கும். 

Last Updated : May 15, 2019, 09:59 AM IST
பாவங்கள் போக்கி தூய்மை செய்யும் சர்வ ஏகாதசி விரதம்! title=

ஏகாதசி என்பது விஷ்ணு பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஏகாந்த தினமாகவே இருக்கும். 

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும்.

'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம். இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.

ஏகாதசி விரதம் மிஞ்சின விரதம் வேறு இல்லை. ஏகாதசியிலும் கைசிக ஏகாதசி மிகவும் விசேஷம். 

Trending News