சில நாட்களே..இவர்களுக்கு சனி பகவானின் ராஜயோகம் கிடைக்கும்

சனியின் ராசி மாற்றம் விசேஷமாகக் கருதப்படுகிறது. சனிபகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தருவார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2022, 07:29 PM IST
  • வேலை சிறப்பாக இருக்கும்
  • புதிய வேலைக்கான வரம் கிடைக்கும்
  • நல்ல நாட்கள் வரும்
சில நாட்களே..இவர்களுக்கு சனி பகவானின் ராஜயோகம் கிடைக்கும் title=

புதுடெல்லி: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் அது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. சனியின் ராசி மாற்றம் விசேஷமாகக் கருதப்படுகிறது. சனிபகவான் ஏதேனும் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருப்பார். இப்படியாக சனி கிரகம் அனைத்து ராசிகளிலும் சஞ்சரிக்க 30 வருடங்கள் ஆகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி தேவன் 29 ஏப்ரல் 2022 அன்று கும்ப ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இதன் காரணமாக இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இந்த ராசிகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

தனுசு
கும்ப ராசிக்கு சனி செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) பாதம் ஏற்படும் என கூறப்படுகிறது. அதன் விளைவாக தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் வரும். உத்தியோகத்தில் அந்தஸ்து உயரும். இதனுடன், நிதி நெருக்கடியிலிருந்து விடுபடுவீர்கள். தந்தையின் சொத்துக்களால் அபரிமிதமான லாபம் உண்டாகும். உடல் வலிகளில் இருந்து விடுபடுவீர்கள். இது தவிர தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க 

ரிஷபம்
சனியின் ராசி மாற்றத்திற்குப் பிறகு ரிஷபம் ராசிக்கு நல்ல காலம் வரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணம் செய்யும் கனவு நிறைவேறும். மூதாதையர் சொத்துக்களால் முழு பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

சிம்மம்
கும்ப ராசியில் சனி பிரவேசித்தால் கெட்ட காலங்கள் விலகும். சனிப்பெயர்ச்சி காலத்தில் பணவரவு அதிகரிக்கும். இது தவிர, வீடு அல்லது நிலத்தில் முதலீடு செய்வது நன்மை தரும். வேலை தேடுபவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளின் வியாபாரம் அதிகரிக்கும். சட்ட உதவி கிடைக்கும். சமூக கௌரவம் அதிகரிக்கும்.

மேஷம்
ஏப்ரல் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு, மேஷ ராசிக்காரர்கள் தொழில் அல்லது வேலையில் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. தொழிலில் பொருளாதார முன்னேற்றம் அடையலாம். புதிய தொழில் தொடங்குவது சாதகமாக இருக்கும்.

ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News