சனி பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்

சனிப்பெயர்ச்சி பலன்: இரண்டரை வருடங்களில் ராசி மாறி கும்ப ராசியில் அமர்ந்துள்ள சனி, ஜூலை 12ம் தேதி வரை கும்ப ராசியிலேயே இருப்பார். இதன் பலன் இந்த 3 ராசிக்காரர்களும் அபரிமிதமான வெற்றியைத் தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2022, 09:48 AM IST
  • 3 ராசிக்காரர்களும் நல்ல பலன்.
  • சனி பகவானின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானது.
  • ஏழரைச் சனி பலன்கள் ஏற்படும்.
சனி பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் title=

சனிப்பெயர்ச்சி 2022 பலன்: ஜோதிடத்தில் சனி பகவானின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானது. நீதியின் கடவுளாகக் கருதப்படும் சனியின் ஆசீர்வாதம் பெற்றவர், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர். 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்ப ராசியில் சனி பகவான் அமர்ந்துள்ளது. ஜாதகத்தில் சனி அமர்ந்துள்ள நிலைப்படி அவரது ஆட்சி, உச்ச, நீசத் தன்மையை வைத்து ஏழரைச் சனி பலன்கள் ஏற்படும். 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி சனி தனது சொந்த ராசியில் கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார். சனியின் ராசியின் இந்த மாற்றம் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றும் சனி, தற்போது 75 நாட்கள் அதாவது ஜூலை 12 ஆம் தேதி வரை கும்ப ராசியில் இருப்பார். அதன்படி இந்த காலக்கட்டத்தில் இந்த 3 ராசிக்காரர்களும் நல்ல பலனைத் பெறுவார்கள்.

மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்: உங்க மகளுக்கு இந்த ராசியா? 

சனியின் வக்ர பெயர்ச்சி
ஜூலை 12 க்குப் பிறகு, சனி வக்ர பெயர்ச்சியாக மீண்டும் தனது சொந்த ராசியான மகரத்தில் நுழையும். இதனுடன், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும், சிலருக்கு சுப பலன்களையும் ஏற்படுத்தும். தற்போது சனிபகவான் 3 ராசிக்காரர்களுக்கு 75 நாட்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரப் போகிறார்.

மேஷம்: சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். ஆளுமை கவர்ச்சியாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் மிகப்பெரிய நன்மைகளைப் பெறுவார்கள். அனைத்து வேலைகளும் எளிதாக முடிவடையும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். அறிவு வளம் பெருகும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சனிபகவானின் அருளால் தடைபட்ட வேலைகள் நிறைவேறும். குடும்ப மகிழ்ச்சியின் முழுமையான பலன்களைப் பெறுவீர்கள். கௌரவம் அதிகரிக்கும். தொழிலில் இணையற்ற உயரும் வாய்ப்பு உள்ளது. சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். காதல் உறவு சிறப்பாக இருக்கும். புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News