ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக கற்றுத்தர வேண்டியவை!

Boy Child Parenting Tips : ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 22, 2024, 04:56 PM IST
  • ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
  • அவர்கள் நல்ல மனிதர்களாக வளர டிப்ஸ்..
  • பெற்றோர்கள் படிக்க வேண்டியது..
ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக கற்றுத்தர வேண்டியவை!  title=

Boy Child Parenting Tips : குழந்தைகளை, நாம் சிறுவயதில் எப்படி வளர்க்கிறோமோ, அப்படித்தான் அவர்கள் எதிர்காலத்தில் பெரிய பிள்ளைகளாக வளர்ந்து நிற்கின்றனர். பெண் பிள்ளைகளோ, ஆண் பிள்ளைகளோ, யாராக இருப்பினும் குழந்தைகளை பண்புகளுடன் வளர்க்க வேண்டியது பெற்றாேரின் பொறுப்பாகும். சமுதாயம் சிறப்பாக மாற, பெண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும் என்ற காலம் எப்போதோ மலையேறி விட்டது. நாட்டில் நடக்கும் க்ரைம் ரேட்டில் அதிகபட்சமானது ஆண்களால் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, ஆண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் என்னென்ன விஷயங்களை தங்களது மகனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பது குறித்து இங்கு பார்ப்போம். 

அடக்கம்:

“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்”

என திருவள்ளுவர் அப்போது சும்மா கூறவில்லை. உங்கள் குழந்தை, எந்த உயரத்திற்கு சென்றாலும் அந்த இடத்தில் அவர் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதை போதனை செய்யுங்கள். வெற்றிகளை கொண்டாடுவது சரியானதுதான் என்றாலும், அது கையை மீறி போய்விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருங்கள். 

அவர்கள் செயலுக்கு அவர்களே பொறுப்பு:

நல்ல மனிதருக்கு, அவர் செய்த செயல்களுக்கு அவர்தான் பொறுப்பு என்பது தெரியும். எனவே, அவர் செய்யும் விஷயங்களுக்கான விளைவை, அவரே எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். இப்போது பலர், தான் செய்த செயல்களுக்கு கூட பிறரை குறை கூறி வருகின்றனர். அப்படியில்லாமல், ஒரு நல்ல ஆண் மகனை வளர்க்கும் பொறுப்பை கையில் எடுத்து, உங்கள் குழந்தைக்கு இது குறித்து கற்றுக்கொடுங்கள். 

தொண்டு மனப்பான்மை:

நலிந்தோருக்கு, முடியாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும். ஒரு சில, சின்னசின்ன கருணை செயல்களும் கூட ஒருவர் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை உங்களது குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள். 

மேலும் படிக்க | உங்க 5 வயது குழந்தைக்கு ‘இதெல்லாம்’ கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்..!!

கடின உழைப்பு:

அனைவருக்கும் தான் வேண்டி விரும்பும் விஷயங்கள் உடனேயே கைகளில் கிடைத்து விடுவதில்லை. அதற்காக அவர்கள் பல்வேறு வகைகளில் போராட வேண்டி இருக்கிறது. ஆனால், ஒரு சில பெற்றோர்கள் தாங்கள் பட்ட சிரமத்தை தங்களின் குழந்தை படக்கூடாது என்று நினைத்து அவர்களுக்கு செல்லம் கொடுத்து வளர்க்கின்றனர். குழந்தைகளை, கடின உழைப்பு என்றால் என்ன என்பதை கற்றுக்கொடுத்தால்தான் தனக்கு கிடைக்கும் விஷயங்களை அவர்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். 

உணர்வு குறித்து அறிதல்:

பெரும்பாலான பெற்றோர்கள், தங்களின் ஆண் குழந்தைகள் அழும் போது அல்லது தங்களின் மனம் புன்படும் போது பெற்றோரிடம் வரும் போது, பலர் “ஆண் பிள்ளைகள் அழக்கூடாது..” என்று கூறி ஆஃப் செய்து விடுகின்றனர். இது போன்று செய்யாமல் அவர்களுக்கு என்னென்ன உணர்வுகள் இருக்கிறதோ அதை வெளிப்படையாக கூற பெற்றோர்கள் வழிவகை செய்ய வேண்டும். 

மரியாதை:

தனக்கு பிடித்தவர்கள் மற்றும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு மட்டுமன்றி, அனைவருக்கும் சமமாக மரியாதை கொடுக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால், அவர்கள் வளர்ந்த பின்பும் மரியாதை மிக்க நபராக வளருவர்.

நேர்மை:

குழந்தைகள் பலர், உண்மையை கூறினால் தான் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்வோமோ என நினைத்து, பல சமயங்களில் பொய் கூறுவர். ஆனால், நேர்மையாக இருந்தால் எந்த சூழலையும் கையாளலாம் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, இதன் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். 

மேலும் படிக்க | பெற்றோர்கள் குழந்தைகள் முன் செய்யக்கூடாத விஷயங்கள்! மீறி செய்தால் ஆபத்து..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News