தெலுங்கு திரையுலகில் பிஸியாகி விட்டாரா நம் விஜய் சேதுபதி?

அடுத்தடுத்து முன்னணி நட்சத்திரங்களுடன் திரைப்படம். தெலுங்கு திரையுலகில் தனது மார்க்கெட்டை பலப்படுத்தி வரும் விஜய் சேதுபதி!

Last Updated : Jan 25, 2020, 07:15 PM IST
தெலுங்கு திரையுலகில் பிஸியாகி விட்டாரா நம் விஜய் சேதுபதி? title=

அடுத்தடுத்து முன்னணி நட்சத்திரங்களுடன் திரைப்படம். தெலுங்கு திரையுலகில் தனது மார்க்கெட்டை பலப்படுத்தி வரும் விஜய் சேதுபதி!

2019-ஆம் ஆண்டில் வெளியான மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சாய் ரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் விஜய் சேதுபதி பிரமாண்டமாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது அவர் தனது அடுத்த தெலுங்கு படமான உப்பேனாவின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த திரைப்படமானது சிரஞ்சீவியின் மருமகன் பஞ்சா வைஷ்ணவ் தேஜின் அறிமுக திரைப்படம் ஆகும்.

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களின் சலுகைகளால் இந்த திரைப்படத்தில் நடிகர் பட்டாளம் நிரம்பி வழிகிறது. சமீபத்திய சலசலப்புப்படி, வருண் தேஜின் வரவிருக்கும் பாக்ஸர் படத்தில் விஜய் சேதுபதி எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.

வருண் தேஜின் பாக்ஸர் திரைப்படத்தினை கிரண் கோர்ராபதி இயக்கியுள்ளார், அல்லு வெங்கடேஷ் மற்றும் சித்து முடா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் விளம்பர பணிகளுக்கு மத்தியில் படத்தின் நாயகன் ஜிம்மில் ஒரு கடுமையான வழக்கத்தை பின்பற்றுகிறார். மேலும், அவர் தனது பங்கை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்த அமெரிக்காவில் குத்துச்சண்டை பாடங்களை பயின்று வருவகிறார்.

இதற்கிடையில், அல்லு அர்ஜுனின் 20-வது படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இது இயக்குனர் சுகுமார் தலைமையில் உருவாகிறது. இப்படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ரூ.1.5 கோடி சம்பளம் கோரியதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில், நடிகர் தற்போது தனது வரவிருக்கும் பெரிய பட்ஜெட் தமிழ் படமான மாஸ்டர் படப்பிடிப்பில் களமிறங்கியுள்ளார். அதில் விஜய்-க்கு வில்லனாக கம்பீர வேடத்தில் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News