காஷ்மீரில் ஃபுல் என்ஜாய் மூடில் சாய் பல்லவி.. வைரலாகும் செம புகைப்படங்கள்

நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டு இருந்தார். அதன்படி காஷ்மீரில் உள்ள அழகிய காட்சிகளை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 8, 2023, 01:10 PM IST
  • சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டு இருந்தார்.
  • மும்மொழி படங்களில் பிசியாக நடித்து வருபவர் சாய் பல்லவி.
  • அழகிய காட்சிகளை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
காஷ்மீரில் ஃபுல் என்ஜாய் மூடில் சாய் பல்லவி.. வைரலாகும் செம புகைப்படங்கள் title=

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தனி இடத்தை பிடித்த நடிகைகளுள் ஒருவர் சாய் பல்லவி. இவருக்கு, குறிப்பாக தமிழ் நாட்டில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இவர் நீலகிரி மாவட்டத்தில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்தவர், ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றவர். ஆனால் மருத்துவராகப் பதிவு செய்துகொள்ளாமல் தன் தாய்வழியாக நடனம் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தொலைக்காட்சி நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

‘கஸ்தூரிமான்’, ‘தாம்தூம்’ திரைப்படங்களில் பெயரிடப்படாத வேடங்களில் நடித்து வந்த சாய் பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். தமிழகத்தில் அந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அவரின் கதாபாத்திரமான மலர் டீச்சர் என பலரும் சாய் பல்லவியை அழைக்க அரம்பித்தனர். இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். 

மேலும் படிக்க | வடிவேலு to சூரி-சிரிப்பு நடிகர்களாக இருந்து சீரியஸ் கேரக்டர்களாக மாறிய நகைச்சுவை நாயகர்கள்..!

பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது. இதுவரை 15 படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, குறுகிய காலத்தில் நிறைய பெயரை சம்பாதித்துள்ளார், இது ஒரு நடிகரின் வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனையாகும். மிடில் கிளாஸ் அப்பாயி, மாரி 2, அதிரன், பாவ கதைகள், லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்க ராய் மற்றும் கார்கி ஆகியவை குறிப்பிடத்தக்க சில படங்கள். திரையுலகில் தனது பணியின் மூலம் மட்டுமே அவர் தன்னை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டு இருந்தார். அதன்படி காஷ்மீரில் உள்ள அழகிய காட்சிகளை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அவர் எடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 தற்போது அவர் சிவகார்த்திகேயன் 21வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் சென்டர் நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதயனிடையே நேற்று நடிகை சாய் பல்லவி காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்று அங்குள்ள பனி லிங்கத்தை வழிபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்திருந்த ரசிகர்களுடன் நடிகை சாய் பல்லவி செல்பியும் எடுத்த புகைப்படங்களும் வைரலானது.

மேலும் படிக்க | தொடரும் தமிழக காவல் துறையினரின் தற்கொலைகள்..! என்ன காரணம்..? தீர்வு எப்போது..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News