ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாமியார்.. அபிராமி செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்

குடும்பத்தில் சாமி விஷயத்தில் தவறு செய்தவர்களை பாம்பு வந்து கொத்தும் என சாமியார் தெரிவித்ததால் ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். பின்னர் மைதிலி, மீனாட்சி சொல்லியும் மன்னிப்பு கேட்க மறுக்கிறாள் ஐஸ்வர்யா.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 15, 2023, 01:05 PM IST
  • எச்சரிக்கும் சாமியார்
  • பயப்படும் ஐஸ்வர்யா
  • மீனாட்சியின் வற்புறுத்தல்
ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாமியார்.. அபிராமி செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்  title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் தீபா லெட்டரை படித்த கார்த்திக் ஐஸ்வர்யாவிடம் சத்தம் போட அபிராமி குறி கேட்கலாம் என்று முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது ஐஸ்வர்யா ரூமுக்குள் அருணிடம் நான் எதுவும் பண்ணல எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று பேச சரி பார்த்துக்கலாம் என அருண் வாக்கு கொடுக்கிறான். மறுநாள் காலையில் எல்லோரும் கோவிலுக்கு வர அபிராமி சாமியாரிடம் சென்று சந்தித்து பரிகாரம் கேட்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சாமியார் எதிரே வருகிறார். பிறகு அவரிடம் சென்று நடந்த விஷயத்தை சொல்லி அதற்கு பரிகாரம் என்ன என்று கேட்க அவர் ஓலைச்சுவடியில் இதற்கான பரிகாரம் இருக்கும் என்று படித்து பார்த்து செல்வதாக சொல்லி ஓலைச்சுவடியை எடுக்கிறார். 

மேலும் படிக்க | 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் கமல்ஹாசனின் படம்!

சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பூஜை ஒன்றை நடத்த வேண்டும் அந்த பூஜையில் இறுதியில் பாம்பு ஒன்று வந்து சாமி விஷயத்தில் தவறு இழைத்தவரை கொத்தும் என சொல்ல அதைக் கேட்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்.  பிறகு மைதிலி மற்றும் மீனாட்சி இருவரும் ஐஸ்வர்யாவிடம் வந்து நீதான் தப்பு பண்ணி இருப்பேன் எங்களுக்கு நல்லாவே தெரியும் உண்மையை ஒத்துக்க சமூகமா தீர்த்துவிடலாம் என்று சொல்ல நான் எதுவும் தப்பு பண்ணல முடிந்தால் நிரூபித்துக் கொள்ளுங்கள் என சொல்கிறாள். 

அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி இதிலிருந்து தப்பிக்க ஐடியா கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | 800 திரைப்படத்தின் OTT வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News