அண்ணா சீரியல்: சவால் விட்ட சௌந்தரபாண்டி.. அறிவாளுடன் கிளம்பிய ஷண்முகம்

Anna Today's Episode Update: நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாண்டியம்மா நகையுடன் இருக்கும் வீடியோவை காட்டி நகை திருடிய பழியை அவள் மீது தூக்கிப் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 3, 2024, 11:29 AM IST
  • சவால் விட்ட சௌந்தரபாண்டி.
  • அறிவாளுடன் கிளம்பிய ஷண்முகம்.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
அண்ணா சீரியல்: சவால் விட்ட சௌந்தரபாண்டி.. அறிவாளுடன் கிளம்பிய ஷண்முகம் title=

Anna Today's Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா: இன்றைய எபிசோட் அப்டேட்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாண்டியம்மா நகையுடன் இருக்கும் வீடியோவை காட்டி நகை திருடிய பழியை அவள் மீது தூக்கிப் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சௌந்தரபாண்டி கொடுத்த ஆதாரத்தை வைத்து நீதிமன்றம் பாண்டியம்மாவிற்கு பத்தாண்டு சிறை தண்டனை என உத்தரவு போடுகிறது. சௌந்தரபாண்டி தப்பித்து விட்டதால் பரணி, சண்முகம் ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். 

மேலும் படிக்க | பயங்கர சுவாரஸ்யமான தெலுங்கு கிரைம் திரில்லர்.. திக் திக் உணர்வைத் தரும்

இதையடுத்து சௌந்தரபாண்டி இவர்கள் எதிரே வந்து உங்களால என்ன எதுவும் பண்ண முடியாது.. அந்த சூடாமணியும் வெளியே வர மாட்டா அப்படியே ஜெயிலுக்குள்ளே இருந்து செத்துப் போயிடுவா என்று சொல்ல சண்முகம் கோபப்பட்டு சட்டையை பிடிக்க இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. 

அதன் பிறகு வைகுண்டம் வீட்டில் எல்லோரும் சாப்பிடாமல் சோகமாக இருக்க பரணி என்ன நடந்தாலும் நீ அறிவாளை எடுக்கக் கூடாது என்று சண்முகத்துக்கு அறிவுரை சொல்கிறாள். இருந்தாலும் அம்மாவை வெளியே கொண்டு வர முடியாத வருத்தத்தில் சண்முகம் உடைந்து போகிறான். 

அதேபோல் மறுபக்கம் தூக்கம் வராமல் தவிக்கும் சௌந்தரபாண்டி எல்லா பதவியும் கைய விட்டுப் போயிடுச்சு.. கூடவே இந்த அக்கா மேலயே பழியை போட்டு ஜெயிலுக்கு அனுப்பிட்டேன். நாளைக்கு காலைல உயிரோடு இருப்ப நான் கூட தெரியல என்று மனம் நொந்து புலம்புகிறார். 

அடுத்ததாக வைகுண்டம் சூடாமணி வெளியே எடுக்க முடியலையே என்று வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு கலங்க இதை பார்த்த சண்முகம் கோபமாகி அறிவாளை எடுத்துக் கொண்டே சௌந்தரபாண்டி வீட்டை நோக்கி வருகிறான்.  

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | அஜர்பைஜானில் இருந்து அவசரமாக சென்னை வந்த அஜித்! ஷாலினிதான் காரணம்..என்னாச்சு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News