முத்துப்பாண்டிக்கு வார்னிங் கொடுத்த டிஎஸ்பி - அண்ணா சீரியல் அப்டேட்!

Anna TV Serial Online: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு கோபமாக வந்த சண்முகம் அப்பாவிடம் என்னை ஏமாத்தி கோயிலுக்கு கூட்டிட்டு போனியா என்று சத்தம் போட்ட நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Written by - RK Spark | Last Updated : Mar 4, 2024, 11:38 AM IST
  • முத்துப்பாண்டிக்கு வார்னிங் கொடுத்த டிஎஸ்பி.
  • ஸ்டேஷனை தேடி வந்த ஆப்பு.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
முத்துப்பாண்டிக்கு வார்னிங் கொடுத்த டிஎஸ்பி - அண்ணா சீரியல் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு கோபமாக வந்த சண்முகம் அப்பாவிடம் என்னை ஏமாத்தி கோயிலுக்கு கூட்டிட்டு போனியா என்று சத்தம் போட்ட நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது பரணி சண்முகத்தை சமாதானம் செய்யும் முயற்சி செய்ய அவன் இனிமே இசக்கி முகத்தில் முழிக்கவே மாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறான். பிறகு பரணி சண்முகத்தை சாப்பிட கூப்பிட அவன் சாப்பாடு வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்ல நீ சாப்பிடாம உன் தங்கச்சி இங்க சாப்பிட மாட்டேன்னு உக்காந்துட்டு இருக்காங்க என்று சொன்னது தன்னுடைய தங்கைகளுக்காக சாப்பிடுகிறான். அதே நேரத்தில் தங்கைகளையும் சாப்பிட வைக்கிறான். 

மேலும் படிக்க | தமிழகத்தில் சக்கைபோடு போடும் மஞ்சுமெல் பாய்ஸ்! இதுவரை செய்த வசூல் எவ்வளவு?

anna

இதனை தொடர்ந்து மறுநாள் பரணி கோலம் போட்டுக் கொண்டிருக்க சண்முகம் காலையிலேயே எழுந்து வெளியில் கிளம்ப பரணி போட்ட கோலத்தை பார்த்து ரசிக்கிறான். பிறகு வெளியே கிளம்ப பரணி இவனுக்கு காபி போட்டு கொடுக்கணும் என்று யோசித்து சட்டையில் பின்னாடி ஏதோ அழுக்கா இருக்கு மாத்திட்டு போ என்று சொல்கிறாள். சண்முகம் அதெல்லாம் எப்படி கடந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்று சொல்ல நீ ஒன்னும் இப்போ சாதாரண ஆள் கிடையாது ஊர் பிரசிடெண்ட் ஒழுங்கா டிரஸ் பண்ணு என்று திட்டியதன் சண்முகம் சட்டையை மாற்றிக் கொண்டு வருவதற்குள் பரணி காபி போட்டு தயாராக காத்திருக்கிறாள். ஆனால் சண்முகம் நீ போட்ட காபி எல்லாம் எனக்கு தேவையில்லை என்று சொல்ல நீ இதை குடிக்கலைன்னா நான் வெளியே எங்கேயும் போக மாட்டேன் இந்த ஊருக்கான உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க மாட்டேன், இதுக்கெல்லாம் காரணம் நீதான் என்று சொல்லுவேன் என பேசி அதிர்ச்சி கொடுக்கிறாள். 

இதனால் சண்முகம் காபி குடித்துவிட்டு, இது உனக்காக இல்ல இந்த ஊர் மக்களுக்காக கொடுக்கிறேன் என்று சொல்கிறான். மறுபக்கம் ஸ்டேஷனுக்கு முத்துப்பாண்டி ஸ்டேஷனுக்கு வந்த டிஎஸ்பி அவனது துப்பாக்கியை கேட்க துப்பாக்கி தொலைந்து போன விஷயத்தை சொல்ல கண்டமேனிக்கு ரைட் விடுகிறார். இன்னும் இரண்டே நாள்தான் டைம் அதுக்குள்ள நீ துப்பாக்கியை கண்டுபிடிக்கணும் இல்லன்னா சஸ்பெண்ட் பண்ணிடுவேன் என்றும் இந்த ரெண்டு நாள் டைம் கொடுக்கட்டும் என் சண்முகம் மச்சான் என்ற ஒரே காரணத்துக்காக தான் என்று எச்சரிக்கிறார். இதனால் முத்துப்பாண்டி இதுக்கெல்லாம் காரணம் சண்முகம் தான் என்று கோபம் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | நடிகை ரெஜினாவிற்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News