நினைத்தேன் வந்தாய்: எழிலால் பசியில் கிடக்கும் பிள்ளைகள்.. சுடர் செய்த அசத்தலான வேலை

ninaithen vandhai zee tamil serial update: இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 4, 2024, 11:13 AM IST
  • நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • சீரியல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நினைத்தேன் வந்தாய்: எழிலால் பசியில் கிடக்கும் பிள்ளைகள்.. சுடர் செய்த அசத்தலான வேலை title=

நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட் : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் எழில் குழந்தைகளுக்கு இனிமே பாக்கெட் மணி கிடையாது என்று கண்டிஷன் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது விஷயம் தெரியாத சுடர் குழந்தைகளை ஸ்கூலில் விட்டுவிட்டு காரில் வந்து கொண்டிருக்கும் போது இராமையாவிடம் நேர வண்டிய வீட்டுக்கு விடுங்க போனது மூக்கை பிடிக்க நல்லா சாப்பிடணும் என்று கூறுகிறாள். 

மேலும் படிக்க | தமிழகத்தில் சக்கைபோடு போடும் மஞ்சுமெல் பாய்ஸ்! இதுவரை செய்த வசூல் எவ்வளவு?

அடுத்ததாக ராமையா எழில் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணியை கட் பண்ண விஷயத்தை கூறுகிறார். இந்துமதி அம்மா இருக்கும்போது தினமும் குழந்தைகளுக்கு பிடித்தது சமைத்துக் கொண்டு போய் ஊட்டி விட்டுட்டு வருவாங்க. அவங்க போனதுக்கு அப்புறம் பசங்களுக்கு பிடிச்சது சாப்பிடறதுக்காக கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புவோம். இப்போ மதியம் என்ன பண்ணப் போகிறது என்று தெரியவில்லை, நான் தான் பொய் ஏதாவது வாங்கி கொடுக்கணும் என்று சொல்ல சுடர் வருத்தப்படுகிறாள். 

அதன் பிறகு ஸ்கூலில் கொண்டு பணம் சாப்பாடு பிடிக்காமல் குழந்தைகள் எல்லாரும் கொட்டி விட்டு பசியில் கிடைக்க அஞ்சலிக்கு அபி தண்ணீர் கொடுத்து பொருத்துக்க என்று சொல்கிறாள். தங்களது அம்மாவை நினைத்து வருத்தப்படுகின்றனர். 

அதன் பிறகு இவர்கள் ஸ்கூல் முடித்து வீட்டுக்கு வர வீடு மணக்கும் வகையில் பிரியாணி செய்து வைத்திருக்கிறாள் சுடர். இதைப் பார்த்து கவின் அஞ்சலி காவியா ஆகியோர் பிரியாணி மீது ஆசை கொள்ள அபி சாப்பிட வேண்டாம் என்று தடுக்கிறாள். 

நாங்க பிரியாணி சாப்பிட்டாலும் அவ மேல கோபமாகத்தான் இருப்போம் என்று சொல்லி சாப்பிட்டு பிரியாணி சூப்பர் சூப்பர் என்று சொல்லி அபியையும் சாப்பிட தூண்டுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | நடிகை ரெஜினாவிற்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News