அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. பரணி கொடுத்த ஷாக்!

Zee Tamil Anna Serial Episode: சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. பரணி கொடுத்த ஷாக் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 13, 2023, 01:54 PM IST
  • அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
  • எதிர்பாராத ட்விஸ்டுடன் அண்ணா சீரியல்.
அண்ணா சீரியல்:  சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. பரணி கொடுத்த ஷாக்! title=

Anna Serial Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலில் முந்தைய எபிசோடில் பரணி கார்த்திக்கிடம் தனது தாலியை எடுத்து காட்டிய நிலையில் இன்று என்ன ட்விஸ்ட் காத்திருக்கிறது என பார்க்கலாம். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அதாவது, கார்த்திக் தனது கல்யாணம் ஆன விஷயங்களை சொல்ல பரணி அதை கேட்டு என்னால் கார்த்தியின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என சந்தோசப்படுகிறாள், அதனை தொடர்ந்து அவன் ஷண்முகம் குறித்து பேச வர அங்கு வரும் சௌந்தரபாண்டி கார்த்தியை பேச விடாமல் தடுத்து தரதரவென இழுத்து சென்று விடுகிறான். 

இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி தெரிந்தோ தெரியாமலோ என் மருமகன் பரணி கழுத்தில் தாலி கட்டிட்டான், இப்போ தான் அவங்களுக்கு இடையே அன்னோன்யன் உருவாகிறது, இந்த நேரத்தில் உன்னுடைய விஷயங்களை சொல்லி அதை கெடுத்து விட வேண்டாம். பரணியுடன் உனக்கு எந்த தொடர்பும் இருக்க கூடாது என்று சொல்ல கார்த்தியும் உண்மை என நம்பி இனிமே ஷண்முகம், பரணியை தொடர்பு கொள்ளவே மாட்டேன் என்று கிளம்பி செல்கிறான். 

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சண்முகத்தை கொல்ல வந்த மனோஜ்.. ரத்னாவுக்கு வரும் சிக்கல்
 
அடுத்ததாக வீட்டிற்கு வந்த பரணி கார்த்தியை பார்த்த மகிழ்ச்சியில் இருக்க இனிமே ஷண்முகத்துடன் சந்தோசமாக இருப்பா என்று நினைக்க இன்னும் 95 நாள் தான் அதுக்கப்புறம் கிளம்பிட்டே இருப்பேன் என ஷாக் கொடுக்கிறாள். ஷண்முகம் அவ எனக்கு பொண்டாட்டியா இருக்கனும்னு நான் ஆசைப்படல, 100 நாள் இந்த வீட்டில் சந்தோசமாக இருந்தால் போதும் என ஷண்முகம் சொல்கிறான். 

மறுநாள் காலையில் ஷண்முகம் கேரளா செல்வதாக சொல்ல வைகுண்டம் சூடாமணியை பார்க்க தான் போகிறான் என அவனை பின்தொடர்ந்து செல்ல முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News