புது மாஸ் அப்டேட்…மீண்டும் இணையும் ஜெயம் ரவி - கார்த்தி

ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோ நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான  பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 1, 2023, 10:46 AM IST
  • இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்.
  • ஜெயம் ரவி இயக்குனராகவும் கார்த்தி ஹீரோவாகவும் நடிக்க உள்ளார்.
புது மாஸ் அப்டேட்…மீண்டும் இணையும் ஜெயம் ரவி - கார்த்தி title=

மணிரத்னம் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதியன்று வெளியானது.  இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் அந்தந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தனர்.  படத்தின் ஒளிப்பதிவும், நடிகர்களின் தேர்ந்த நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபலா, அஷ்வின், ரஹ்மான், பார்த்திபன், சரத்குமார், ஜெயராம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

சோழர்களின் வரலாற்றை பற்றி புனைந்து கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் ஆரம்பத்தில் ஒரே படமாக வெளியிட திட்டமிட்டு, அதன்பின்னர் இரண்டு பாகங்களாக வெளியிட்டார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தமிழகத்தில் ரூ.230 கோடிக்கும் மேல் வசூல் செய்தது மற்றும் படம் உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.  பொன்னியின் செல்வன்-2 படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 'பொன்னியின் செல்வன்-2' படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு நாள் ஆகிவிட்டது, அந்த வகையில் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து மக்கள் ரசித்து வருகின்றது.

மேலும் படிக்க | உயிர் உங்களுடையது தேவி... குந்தவை எனும் ஐயன் லேடி - மறக்க கூடாத சோழர் குல இளவரசி!

இந்நிலையில், தற்போது அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஜெயம் ரவி கூறியதாவது., நான் அவ்வப்போது மணிரத்னம் அவர்களிடம் ஒன்லைன் கதை சொல்வேன், அதைக் கேட்ட அவர் நீ தாராளமாக கதை எழுதலாம் என்று கூறினார். அவர் சொன்ன பிறகுதான் என் மீது நம்பிக்கை அதிகரித்து ஒரு சில கதைகளை எழுதி உள்ளேன். நடிகர் கார்த்தி இடம் கூட ஒரு கதை சொல்லி இருக்கிறேன், எனது இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிப்பார் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஜெயம் ரவி இயக்குனராகவும் கார்த்தி ஹீரோவாகவும் நடிக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி சைரன் படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி விரைவில் அறிமுகம் இயக்குனர் ஒருவரின் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரு பேண்டஸி படம் என்றும் கூறப்படுகிறது. மறுபுறம் நடிகர் கார்த்தியின் 25வது படமான 'ஜப்பான்' படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ராஜூமுருகன் இயக்கி வரும் இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். அவருடன் தெலுங்கு நடிகர் சுனில், விஜய் மில்டன் உட்படப் பலர் நடித்து வருகிறார்கள். மேலும் 'ஜப்பான்' ரிலீஸ் குறித்து ஜூனில் அறிவிப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பிரேக் எடுக்க போகிறேன்..சிவகார்த்திகேயன் ட்வீட், ரசிகர்கள் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News