கார்த்திகை தீபம்... கார்த்திக் வாழ்க்கையில் நடக்க போவது என்ன?

Karthigai Deepam Today's Episode Update: ஏத்தி விட்ட ஐஸ்வர்யா.. தீபாவுக்கு எதிராக திரும்பும் ரம்யா, கார்த்திக் வாழ்க்கையில் நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 27, 2024, 01:43 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • தீபாவுக்கு எதிராக திரும்பும் ரம்யா
  • கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கார்த்திகை தீபம்... கார்த்திக் வாழ்க்கையில் நடக்க போவது என்ன? title=

Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவுக்கு கார்த்திக் தான் தீபாவின் புருஷன் என்ற உண்மை தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ரூமுக்குள் பயங்கர யோசனையிலும் கோபத்திலும் இருக்கும் ரம்யா ராமன் சீதை சிலையை தூக்கி போட்டு உடைக்கிறாள், அதனை தொடர்ந்து மறுநாள் காலையில் ஐஸ்வர்யாவை சந்தித்து இந்த வேலையெல்லாம் செய்தது நீ தான் என்று எனக்கு தெரியும் என்று கோபப்பட ஐஸ்வர்யா நான் கார்த்தியோட அண்ணி தான், கார்த்தி ஒன்னும் தீபாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கல, தீபா அவனை ஏமாற்றி தான் தாலி கட்டி கிட்டா என்று தீபாவை பற்றி நெகட்டிவ்வா சொல்லி ரம்யாவை நம்பவும் வைக்கிறாள். 

இதையடுத்து வீட்டிற்கு வந்த ரம்யா மீண்டும் யோசனையில் இருக்க அவளது மனசாட்சி தோன்றி அவள் செய்வது தப்பு என்று ஒரு பக்கம் சொன்னாலும் இன்னொரு பக்கம் கார்த்திக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, கடவுள் உனக்கும் கார்த்திக்கும் ஏற்கனவே ஒரு முடிச்சு போட்டு இருக்காரு என்று பேச ரம்யா ஒரு முடிவெடுத்து உடைந்து போல் சிலையில் இருந்து ராமனை மட்டும் தனியாக பிரித்து எடுத்து பார்க்கிறாள். 

மேலும் படிக்க | பஞ்சாயத்தில் பட்டய கிளப்பிய பரணி.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அடுத்த நாள் ரம்யா அபிராமி வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து எல்லாருக்கும் ஒரு கிப்ட் கொடுத்து அபிராமி அருணாச்சலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். தீபா எங்கே என்று கேட்க அவள் மார்க்கெட் போய் இருப்பதாக சொல்லி போனை போட்டு கொடுக்க தீபா என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க, சொல்லி இருந்தா வெயிட் பண்ணி இருப்பேன்ல என்று பேச ரம்யா இந்த வழியா வந்தேன், அபப்டியே பார்த்துட்டு போகலாம்னு வந்ததாக சொல்கிறாள். பிறகு மைதிலி எங்க எல்லாருக்கும் கிப்ட் கொடுத்துட்ட.. தீபாவுக்கு எங்கே என்று கேட்க ரம்யா அவளுக்கு பெரிய கிஃப்டா ஸ்பெஷலா இருக்கு என்று சொல்லி கிளம்புகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தையும் உயர்த்தினார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News