விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் அடுத்த டூர் - எங்கே தெரியுமா?

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பார்சிலோனாவுக்கு சென்றிருக்கின்றன. அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 12, 2022, 05:38 PM IST
  • விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் ஜூன் மாதம் நடந்தது
  • இருவரும் ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்றனர்
  • தற்போது பார்சிலோனா சென்றிருக்கின்றனர்
 விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் அடுத்த டூர் - எங்கே தெரியுமா? title=

நானும் ரௌடிதான் படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. இருவரும் ஒரேவீட்டில் இருந்துவந்த சூழலில் இவர்களது திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடந்தது. மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இந்தத் திருமணத்தில் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையே, தங்களது திருமணத்தையொட்டி தமிழ்நாட்டில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இருவரும் உணவு ஏற்பாடு செய்தனர். அவர்களது இந்த செயல் பரவலான வரவேற்பைப் பெற்றது. திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், உங்களது ஆதரவும் அன்பும் தொடர்ந்து எங்களுக்கு வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தனர்.

இதனையடுத்து நயனும், விக்னேஷ் சிவனும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. ஹனிமூனை முடித்திவிட்டு நாடு திரும்பிய நயன், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் பாடலையும், தொடக்க நிகழ்ச்சியையும் இயக்கினார். மேலும் அஜித் படத்தின் கதை விவாதத்திலும் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.

Nayanthara

இந்நிலையில்,விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளதாக விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். இதனுடன் அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் இணைத்து, “தொடர்ச்சியான பல வேலைகளுக்குப் பிறகு! இங்கே எங்களுக்காக சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

முன்னதாக, இவர்களின் திருமண நிகழ்ச்சி வீடியோவின் புரோமோ சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. மேலும், நயன்தாரா சாப்பிட்ட உணவின் ஒவ்வாமை காரணமாக திடீரென்று வாந்தி எடுத்ததாகவும் இதனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க | நான் கூட "பீஃப் பிரியாணி" சாப்பிடுவேன்.. உணவு என்பது தனி மனித உரிமை -அமைச்சர் மா.சு.,

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News