நினைத்தேன் வந்தாய்: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.‌. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரி

Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2024, 04:24 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்
  • எதிர்பார்த்து ஏமாந்த மனோகரி.
  • எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.
நினைத்தேன் வந்தாய்: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.‌. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரி title=

நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து குழந்தையையும் தாயையும் காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது சுடர் பெண்களைப் பற்றியும் பெண்களின் வலிகளை பற்றியும் பேசி கண்ணீர் விடுகிறாள். நீங்க ரொம்ப நல்லவர் சார் என்று எழிலை பற்றியும் பேசி கண் கலங்குகிறார். நான் எதுக்கு அழுறேன்னு தெரியல ஆனா அழறேன் என்று அழுது அப்படியே மயங்கி ஏழில் மீது சாய்ந்து கொள்கிறாள். 

மேலும் படிக்க | பூசணிக்காய், பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்

இவர்கள் இருவரும் வீட்டுக்கு வர மனோகரியும் செல்வியும் மாடியில் இருந்து இதை பார்த்து கடுப்பாகின்றனர். பிறகு மனோகரி சுடரிடம் என்ன ஆச்சு என்று கேட்க அவள் பதில் ஏதும் சொல்லாமல் செல்கிறாள். பிறகு எழிலிடம் என்ன விஷயம் என்று கேட்க அவ வேற ஒரு ஃபீலிங்ஸ்ல இருக்கா உனக்கு சொன்னா புரியாது என்று சொல்லி அவனும் உள்ளே சென்று விடுகிறான். 

திரும்பவும் மனோகரி சுடரை சந்தித்து என்ன விஷயம் என்று கேட்க இந்துமதி காதல் கதையைப் பற்றி சொல்ல காண்டாகிறாள். உடனே ஸ்டோர் ரூமுக்கு சென்று அங்கிருக்கும் இந்துமதி போட்டோவை பார்த்து எல்லாம் உன்னால தான் என்று இந்துவை கோபப்பட்டு திட்டுகிறார். ப்ளாஸ் கட்டில் எழில் இந்த இடம் காதலை சொல்லிய தினத்தில் மனோகரி தன்னிடம் தான் காதலை சொல்லுவான் என எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்தது தெரிய வருகிறது. 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | TN Lok sabha Election 2024: சினிமா பிரபலங்கள், நட்சத்திர வேட்பாளர்கள் வாக்குப்பதிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News