நினைத்தேன் வந்தாய்: வீட்டை விட்டு ஓடி வந்து ரவுடிகளிடம் சிக்கிய குழந்தைகள்.. சுடரால் ட்விஸ்ட் இருக்கு

ninaithen vandhai zee tamil serial update: இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 7, 2024, 01:03 PM IST
  • நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • சீரியல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
  • வீட்டை விட்டு ஓடி வந்து ரவுடிகளிடம் சிக்கிய குழந்தைகள்.
நினைத்தேன் வந்தாய்: வீட்டை விட்டு ஓடி வந்து ரவுடிகளிடம் சிக்கிய குழந்தைகள்.. சுடரால் ட்விஸ்ட் இருக்கு title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைகள் அப்பா சாரி கேட்டால் இங்க இருக்கலாம் இல்லனா கொடைக்கானல் போய்டலாம் என முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, எழில் மன்னிப்பு எதுவும் கேட்காமல் என்னையே எதுக்கு பார்க்கறீங்க, சாப்பிடுங்க என அப்போதும் ஸ்ட்ரிக்ட்டாக பேச கவின் அஞ்சலியிடம் பாரு இப்பயும் அப்பா ஸ்ட்ரிக்ட்டா தான் இருக்காரு என்று சொல்ல அஞ்சலி வீட்டை விட்டு போய்டலாம் என்று சொல்கிறாள். 

மேலும் படிக்க | இசக்கியை ஏற்று கொள்ள முடிவு செய்யும் முத்துப்பாண்டி! தங்கைகளுக்காக மனம் மாறும் ஷண்முகம்!

அடுத்து எல்லாத்தையும் பேக் செய்து கொண்டு கிளம்ப ராமையா ஸ்கூலில் விட்டு வர குழந்தைகள் அங்கிருந்து எஸ்கேப் ஆகி டிராவல் ஏஜென்சி ஒன்றிற்கு வந்து கொடைக்கானல் போக 4 டிக்கெட் வேணும் என்று கேட்கின்றனர், பேரன்ட்ஸ் கூட்டிட்டு வாங்க என்று சொல்லி வெளியே அனுப்ப ரவுடிகள் இதை நோட்டம் விட்டு நாங்க கொடைக்கானல் கூட்டிட்டு போறோம் என்று ஏமாற்றி காரில் ஏற்றுகின்றனர். 

ஒரு ரவுடி போனில் குழந்தைகளை கடத்துவது பற்றி பேச சுடர் இதை கேட்டு குழந்தைகளை காப்பாற்ற முடிவெடுக்கிறாள். இவள் வெளியே வருவதற்குள் கார் கிளம்பி விட ஆட்டோவில் தேடி அலைகிறாள். ஸ்கூலில் இருந்து எழிலுக்கு போன் செய்து குழந்தைகள் ஸ்கூல் வரல என்று சொல்ல ராமய்யாவுடன் சேர்ந்து குழந்தைகளை தேடுகிறான். 

குழந்தைகளை தேடி அலையும் சுடர் ஓரிடத்தில் மடக்கி பிடித்து அப்பா உங்களை காணோம்னு போலீஸ்ல கம்பளைண்ட் கொடுத்துட்டு தேடிட்டு இருக்காரு என்று பில்டப் செய்ய ரவுடிகள் நழுவி விடுகின்றனர், பிறகு குழந்தைகளிடம் அவங்க உங்களை கடத்த பிளான் பண்ணாங்க என்று சொல்ல எங்களை காப்பாத்திட்டீங்க தாங்க்ஸ் என்று சொல்லி அவளை கட்டி பிடித்து கொள்கின்றனர். 

பிறகு சுடர் அவர்களிடம் பேச வீட்டை விட்டு ஓடி வந்து விட்ட விஷயம் தெரிய வருகிறது, சுடர் இவர்களை கூட்டி கொண்டு வெளியே செல்ல மறுபக்கம் எழில் குழந்தைகளை தேடி அலைகிறான். இப்படியான நிலையில் அடுத்து அடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Actor Vishal: அரசியல் கட்சி தொடர்பாக விஷால் வெளிட்ட முக்கிய அறிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News