‘என்னைப்பற்றிய வதந்திகளை நிறுத்துங்கள்’ - பாலிவுட்டுக்கு போன தென்னிந்திய நடிகை வேதனை

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நிறுத்துமாறு நடிகை ராஷி கண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 6, 2022, 06:17 PM IST
  • நடிகை ராசி கண்ணா தெரிவித்த சர்ச்சைக் கருத்து
  • சமூகவலைதளங்களில் எழுந்த கடுமையான கண்டனம்
  • வதந்திகள் பரப்பப்படுவதாக நடிகை ராசிகண்ணா வருத்தம்
‘என்னைப்பற்றிய வதந்திகளை நிறுத்துங்கள்’ - பாலிவுட்டுக்கு போன தென்னிந்திய நடிகை வேதனை title=

தென்னிந்திய நடிகையான ராஷி கண்ணா, சமீபத்தில் பாலிவுட்டில் பல திட்டங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  சில பேட்டிகளிலும் பங்கேற்ற அவர், பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைத்துறைகளுக்கு இடையேயான வித்தியாசம் குறித்து பேசிய அவர், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் தன்னை மிகவும் வருத்தமடைய செய்திருப்பதாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க | மோடி முகத்தில் கத்தி : விஜய் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்

அண்மையில் ரிலீஸான த்ரில்லர் தொடரான ​​ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸில்அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்தார். அதில் நெகடிவ் ரோலில் நடித்த ராசி கண்ணா, அந்த ரோல் குறித்தும் கடந்த காலங்களில் இதுமாதிரியான வாய்ப்புகள் ஏன் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். குறிப்பாக தென்னிந்திய சினிமாக்களில் பெண்களின் நிலை குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த தகவல் சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பாலிவுட்டுக்கு சென்ற ராசிகண்ணா, தென்னிந்திய சினிமாவை விமர்சிப்பதாகவும் கண்டனங்கள் எழுந்தன.

நாளிதழுக்கு அண்மையில் பேட்டியளித்த நடிகை ராசி கண்ணா, ’தோற்றத்துக்கு அப்பால் நடிகைகள் தென்னிந்தியாவில் பார்க்கப்படுவதில்லை. நீங்கள் சண்டை காட்சிகளில் நடிக்க முடியாது. பெண்களை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கம் அடிப்படையில் இருக்கிறது. பெண்களை போற்றுவதற்கும், புறக்கணிப்பதற்குமான இடைவெளியை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. பாலிவுட்டில் அப்படியில்லை" என்பது உள்ளிட்ட கருத்துகளை கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. 

இந்த செய்திக்கு மறுப்பு வெளியிட்டுள்ள நடிகை ராசி கண்ணா, தான் தெரிவித்த கருத்துகளுக்கு மாறாக திரிக்கப்பட்ட கருத்துகள் சமூக ஊடகங்களில் பரபரப்பபடுவதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக கூறிய அவர், சினிமா துறைகளை குறைத்து மதிப்பிடும் வகையிலான கருத்துகளை தெரிவிக்கவில்லை எனத் தெரவித்துள்ளார். தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அல்லது ஒரு சிலரால் வேண்டுமென்றே தவறாக பரப்பப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள நடிகை ராசிகண்ணா, இது தன்னை மிகவும் வருத்தமடைய செய்திருப்பதாக கூறியுள்ளார். இதுபோன்ற தவறான கருத்துகளை பரப்புபவர்கள் உடனடியாக நிறுத்துமாறும் அவர் வேதனையுடன் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் படிக்க | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்ட ராஜமௌலி - வைரலாகும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News