அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ரஜினியை சந்திக்க முடியும்

Last Updated : May 13, 2017, 01:53 PM IST
அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ரஜினியை சந்திக்க முடியும் title=

ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்கள் கண்டிப்பா க்யூஆர் கோடு அடையாள அட்டை உடன் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதி என ரஜினிகாந்த் மன்ற நிர்வாகியான சுதாகர் கேட்டுக்கொண்டு உள்ளார் வரும் 15-ம் தேதி முதல் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். அந்த சந்திப்பின் போது ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகி சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியதாவது:-

ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையான க்யூஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கவும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Trending News