சந்தியா ராகம்: ரகுராமுக்கு தண்டனை கொடுக்கும் ஊர் மக்கள், ஜானகிக்கு அதிர்ச்சி

Sandhya Raagam Serial Today Jan 22 Episode Update: ரகுராமுக்கு தண்டனை கொடுக்கும் ஊர் மக்கள், ஜானகிக்கு அதிர்ச்சி - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 22, 2024, 12:30 PM IST
  • இந்த சீரியல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.
  • இதனை Zee5 தளத்திலும் நீங்கள் பார்க்கலாம்.
  • வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிறது.
சந்தியா ராகம்: ரகுராமுக்கு தண்டனை கொடுக்கும் ஊர் மக்கள், ஜானகிக்கு அதிர்ச்சி title=

Sandhya Raagam Serial Today's Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இதுவரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இன்று முதல் தினந்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சந்தியா ராகம் (Sandhya Raagam) சீரியல் எபிசோடில் ரமணியம்மா ஜானகியிடம் நீ மாயா மாயா ன்னு தனத்த கவனிக்க மறந்துட்ட என சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | மாரி அப்டேட்: மாரியை தத்தெடுக்க முடிவு எடுத்த பார்வதி.. தாராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அதாவது, ரமணி அம்மா ஜானகியிடம் அன்னிக்கு தப்பு பண்ணது தான் மாயா மட்டும் இல்லனா அவளை காப்பாற்றி இருக்க முடியாது என்று தனம் செய்த தவறை எடுத்துச் சொல்ல அதைக் கேட்டு ஜானகி அதிர்ச்சி அடைகிறாள். மேலும் ரமணியம்மா அதுக்காகத்தான் நான் அன்னைக்கு மாயாவ மன்னிச்சு இந்த வீட்ல இருக்கட்டும்னு ரகுராமிடம் பேசியதாக சொல்கிறார். மறுபக்கம் ரகுராம் காலேஜிலிருந்து மாயா மற்றும் தனத்தை அழைத்துக் கொண்டு வர இருவரும் தயக்கத்தோடு வருகின்றனர். 

ரகுராம் மாயா செய்தது சரிதான் என்று சொல்லி வீட்டிற்கு அழைத்து வருகிறார். வீட்டில் எல்லோரும் இருக்கும்போது மாயா பெரிய விஷயம் செஞ்சிருக்கா அவ இடத்தில் இருந்து யோசிக்கும் போது அவ செய்தது சரிதான், எல்லா இடத்திலும் அவளை பத்தி தான் பேச்சு என சொல்கிறார். ஜானகியிடம் புள்ளைங்க சாப்பிடாம இருந்திருக்கும் கூட்டிட்டு போய் சாப்பிட வை என சொல்ல ஜானகி ஆச்சரியம் அடைகிறாள். 

அடுத்து எல்லோரும் சாப்பிட்டு தூங்கி விட மறுநாள் காலையில் ஒரு மக்கள் எல்லோரும் ஒன்று கூடி ரகுராம் செய்தது தவறு அவருக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என அவரை உட்கார வைத்து மொட்டை அடிப்பது போல் கனவு கண்டு ஜானகி அதிர்ச்சி அடைந்து எழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பல்லவியை கண்டுபிடிக்க கார்த்திக் எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News