சைமா விருதுகள் 2021: 7 நாமினேஷன்களை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்!

தென்னிந்தியாவின் முக்கிய விருதுகளாக கருதப்படும் சைமா விருதுகள் பட்டியலில் 2020ம் ஆண்டுக்கான நாமினேஷன்களில் 7 இடங்களை பிடித்துள்ளது துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2021, 03:28 PM IST
  • சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், காமெடியன்கள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்கள் என அனைவருக்கும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
  • துல்கர் சல்மான் நடித்த அவரின் 25வது படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் 7 நாமினேஷன்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
சைமா விருதுகள் 2021:  7 நாமினேஷன்களை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்!  title=

தென்னிந்தியாவின் முக்கிய விருதுகளாக கருதப்படும் சைமா விருதுகள் பட்டியலில் 2020ம் ஆண்டுக்கான நாமினேஷன்களில் 7 இடங்களை பிடித்துள்ளது துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (KannumKannum Kolliyadithal) திரைப்படம்.

சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், காமெடியன்கள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்கள் என அனைவருக்கும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.   அந்தவகையில் கடந்த ஆண்டுக்கான சிறந்த படங்கள்,நடிகர் நடிகைகளின் நாமினேசன் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.  சைமாவின் இணையதளத்தில் சென்று ரசிகர்களும், பொதுமக்களும் தங்களுக்கு விருப்பமான படங்களுக்கு வாக்களிக்கலாம்.  அதிகமான வாக்குகளை பெறும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு விருது வழங்கப்படும்.

துல்கர் சல்மான் நடித்த அவரின் 25வது படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (KannumKannum Kolliyadithal) திரைப்படம் 7 நாமினேஷன்களில் சேர்க்கப்பட்டுள்ளது.  சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த முதல் பட இயக்குனர், சிறந்த முதல் பட நடிகர், சிறந்த முதல் பட நடிகை, சிறந்த துறை துணை நடிகர், சிறந்த இசையமைப்பாளர் என ஏழு கேட்டகிரியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (KannumKannum Kolliyadithal) படம் இடம்பெற்றுள்ளது.  இதனால் இப்படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.  கொரோனா தொற்று தமிழகத்திற்கு வருவதற்கு முன் கடைசியாக திரையரங்களில் நன்றாக ஓடி வசூல் செய்த படம் இதுவே.  சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் இப்படத்தில் நடித்த துணை நடிகை நிரஞ்சனிக்கும் திருமணம் நடைபெற்றது.

ALSO READ அடுத்த ஆண்டிற்கு செல்லும் கே.ஜி.எப் 2..! காரணம் இதுதான்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (KannumKannum Kolliyadithal) திரைப்படம் வெளிவந்து ஓர் ஆண்டுகள் ஆகியும் இன்னும் தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பினை வெளியிடாமல் இருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.  சமீபத்தில் இவரைப் பற்றிய செய்திகள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.  ரஜினி அல்லது விஜயை வைத்து தனது அடுத்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வராததால் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe

Trending News