வில்லனே பார்த்து மலைக்கும் சூப்பர் சூரர் சூர்யா @சூரரைப் போற்று!

சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகி அனைவரின் இதயங்களையும் தொட்டு, வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. நடிகர் சூர்யாவின் அற்புதமான நடிப்பு மற்றும் நேர்த்தியான கதையம்சம், நேர்மறையான கதாபாத்திரங்கள் என பல பரிமாணங்களிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது சூரரைப் போற்று திரைப்படம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 17, 2020, 08:59 PM IST
வில்லனே பார்த்து மலைக்கும் சூப்பர் சூரர் சூர்யா @சூரரைப் போற்று! title=

சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகி அனைவரின் இதயங்களையும் தொட்டு, வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. நடிகர் சூர்யாவின் அற்புதமான நடிப்பு மற்றும் நேர்த்தியான கதையம்சம், நேர்மறையான கதாபாத்திரங்கள் என பல பரிமாணங்களிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது சூரரைப் போற்று திரைப்படம்.

திரைப்படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் (Paresh Rawal) இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இரக்கமற்ற விமான அதிபர் பரேஷ் கோஸ்வாமி (Paresh Goswami) வேடத்தில் நடித்து தூள் கிளப்பியிருந்தார். எந்தவொரு திரைப்படத்தில் கதாநாயகனின் கதாபாத்திரத்திற்கு வலுவூட்டுவது சிறந்த வில்லன் கதாபாத்திரம் தானே? தனது பங்களிப்பை மிகவும் அற்புதமாக செய்திருந்த பரேஷ் ராவலின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.   

Read Also | தனது அரசியல் பிரவேசம் குறித்து மௌனம் கலைத்தார் நடிகர் சூர்யா

சூரரை போற்று திரைப்படம் ஒரு பான்-இந்தியா படம் (pan-India film) என்று கூறும் பரேஷ் ராவல், "ஒரு வெற்றி பெற்ற மனிதனின் கதை சூரரைப் போற்று. அவரது கனவு மற்றும் உழைப்பின் மூலம் மிக உயர்ந்த இடத்தை அடையும் அவர் அதை சட்டரீதியாக சாதிக்கிறார் என்ற கதை இது. தமிழ் திரையுலகின் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவை பார்த்து என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை" என்று சிலாகிக்கிறார்.

"சூர்யா ஒரு அருமையான கலைஞர், அவர் ஒரு மெகாஸ்டாராக இருந்தாலும் மிகவும் சாதாரணமாக நடந்துக் கொள்வதைப் பார்த்தால் வியப்பாக இருந்தது. அவர் திரைப்படம் நடைபெறும் செட்டிற்க்கு வரும்போது அவர் முழுமையாக தயாராக இருக்கிறார். அவர் என்னுடன் மிகவும் பொறுமையாக நடந்துக் கொண்டார். எனக்கு தமிழ் தெரியாது, என்னுடன் நடிக்கும்போது அவருக்கு பல சிரமங்கள் இருந்தன. உதாரணமாக, நான் வசனங்கள் பேசும்போது பலமுறை உச்சரிப்பு சரியாக இல்லாமல் பல டேக்குகள் எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒருமுறை கூட அவர் சலித்துக் கொண்டதில்லை, சூர்யாவுடன் வேலை செய்வது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. தமிழ் திரைப்படத்தில் வேலை செய்வது போலவே தோன்றவில்லை. பாலிவுட்டில் வேலை செய்வது போலவே உணர்ந்தேன" என்று நடிகர் சூர்யாவின் அருமையை  பெருமையுடன் சொல்கிறார் பாலிவுட்டில் பெயர் பெற்ற நடிகரான இந்த சூரர். 

தமிழ் திரையுலகைப் பற்றி மேலும் பல கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட பரேஷ் ராவல், "நான் ஜோதிகாவுடன் ஏற்கனவே பணிபுரிந்திருக்கிறேன், அவர் ஒரு சிறந்த நடிகை. நாங்கள் பிரியதர்ஷனின் Doli Saja Ke Rakhna என்ற திரைப்படத்தில் ஒன்றாக வேலை செய்தோம். பொதுவாக, தென்னிந்திய நட்சத்திரங்களும், மக்களும் உலக சினிமா மற்றும் இந்தி படங்களைப் அற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே எங்களுக்கு பேசுவதற்கான விஷயங்களும் நிறைய இருந்தது" என்று சொல்கிறார்.
சூரரைப் போற்று திரைப்பட இயக்குனர் சுதா கொங்கரா (Sudha Kongara) மிகவும் கண்டிப்பானவர் என்றும் சொல்ல  முடியாது, அதே நேரத்தில் வேலையில் எந்தவித சமரசமும் செய்துக் கொள்ள மாட்டார் என்றும் ராவல் கூறுகிறார். 

சூரரைப் போற்று திரைப்படத்தின் கருப்பொருளை நிரூபிப்பது போல, தமிழ் திரையுலகின் சூரரைப் போற்றிப் புகழ்கிறார் பாலிவுட் மூத்த நடிகர் பரேஷ் ராவல். இந்தத் திரைப்படம் நடிகர் சூர்யாவின் மகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரம் என்று சொன்னால், அவரது குணம் தங்கம் என்று ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துகிறார் வில்லன் பரேஷ் ராவல்..

Also Read | கஞ்சத்தனம் வேண்டாம் காஜல் என்று Lakshmi Manchu சொன்ன காரணம் தெரியுமா? .

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News