இந்த முக்கிய தியேட்டர் யாருக்கு? டாஸ் போட்டு முடிவு செய்த அஜித், விஜய் ரசிகர்கள்!

Thunivu vs Varisu: துணிவு - வாரிசு படங்கள் நாளை வெளியாக உள்ள நிலையில், பூவா தலையா போட்டு அஜித் - விஜய் ரசிகர்கள் செய்த காரியம் வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 10, 2023, 04:15 PM IST
  • ஜன. 11 நள்ளிரவு 1 மணிக்கு துணிவு ரிலீஸ்.
  • ஜன. 11 அதிகாலை 4 மணிக்கு வாரிசு ரிலீஸ்.
  • இரு படங்களின் டிக்கெட்டுகளுக்கும் கடும் கிராக்கி.
இந்த முக்கிய தியேட்டர் யாருக்கு? டாஸ் போட்டு முடிவு செய்த அஜித், விஜய் ரசிகர்கள்! title=

Thunivu vs Varisu: 2023ஆம் ஆண்டின் முதல் எதிர்பார்ப்பாக இருக்கும் துணிவு - வாரிசு படங்கள் நாளை முதல் திரையரங்கில் போட்டிப்போட உள்ளன. ஆரோக்கியமான வகையில் இரு பெரும் நடிகர்களுக்கு இடையே நடக்கும் போட்டி என்பது தமிழ் சினிமாவை வியாபார ரீதியில் பெரிய அளவில் கைக்கொடுக்க கூடியது என்பதால், திரையரங்க உரிமையாளர்கள் முதல் நாளை முதல் காட்சியை தவிர்த்து இரு படங்களுக்கு சமமான அளவில் திரைகளை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி, நாளை நள்ளிரவு 1 மணியளவில் துணிவு படமும், அதிகாலை  4 மணிக்கு வாரிசு படமும் திரையரங்கில் வெளியாகும் என கூறப்பட்டன. இதற்கான டிக்கெட்டுகள் சில மணித்துணிகளிலே விற்றுத்தீர்ந்தன. சென்னையில், முதல் 5 நாள்களுக்கு இரு படங்களின் டிக்கெட்டுகளுக்கும் கடும் கிராக்கி நிலவுகிறது. மேலும், ரசிகர்கள் இன்று நள்ளிரவு கொண்டாட்ட ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க |  துணிவு vs வாரிசு டிக்கெட் விலை! ரூ.750 - ரூ.2000..! ரசிகர்களுக்கு பிம்பிலிக்கா பிலாபி!

மேலும், இரு நடிகர்களின் படங்களுக்கும் இந்திய அளவில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் எதிர்பார்ப்பு உள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் தமிழ் திரைப்படங்கள் கொண்டாடப்பட்டாலும், அந்தமான் தீவுகள் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் அங்கு தமிழ் படங்களுக்கு பலத்த வரவேற்பு இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் துணிவு வாரிசு படங்களும் அந்தமான் தீவுகளில் களமிறங்க உள்ளது.

இந்நிலையில், அந்தமானில் துணிவு - வாரிசு படத்திற்கு திரையரங்கங்கள் ஒதுக்கப்பட்ட தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்தமான் தீவுகளில் மொத்தமே 3 திரைகள்தான் இருக்கிறது. அதில், ஒன்றில் துணிவும், மற்றொன்றில் வாரிசும் வெளியாகிறது. ஆனால், அந்த மூன்றாவது திரையரங்கம்தான் அங்கு பிரச்னையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இரு நடிகர்களின் ரசிகர்களும், தங்கள் நடிகரின் படத்தை போடும்படி வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால், தொடர்ந்து பிரச்னை நீடித்து வந்ததை அடுத்து இரு தரப்பும் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. காசை சுண்டிவிட்டு, பூவா தலையா போட்டு, யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு திரையரங்கம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அஜித் ரசிகர்கள் டாஸை வெல்ல, அந்த திரையரங்கத்தில் துணிவு படம் கன்பார்ம் ஆகியுள்ளது. 

இவை அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்ட நிலையில், அந்த வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டது. அவைதான் தற்போது வைரலாகி வருகின்றன. குறிப்பாக, தமிழ் சினிமா என்பது தமிழ்நாட்டை தாண்டியும் பெரும் வீச்சை பெற்றுள்ளது இதன்மூலம் உறுதியாகிறது. 

மேலும் படிக்க |  வாரிசு படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்..! குஷ்பூ-வுக்கு மட்டும் லட்சத்தில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News