'உறியடி' விஜய்குமாரின் அடுத்த படம் இதுதான்! வெளியான தகவல்!

அப்பாஸ்.ஏ.ரஹ்மந்த் இயக்கத்தில் விஜய்குமார் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதை நடிகர் விஜய்குமார் சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 3, 2022, 02:56 PM IST
  • உறியடி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜயகுமார்.
  • அதனை தொடர்ந்து உறியடி 2 படத்தை இயக்கி நடித்து இருந்தார்.
  • இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து இருந்தது.
'உறியடி' விஜய்குமாரின் அடுத்த படம் இதுதான்! வெளியான தகவல்!  title=

2016ம் ஆண்டு தமிழில் வெளியான 'உறியடி' படத்தின் மூலம் இயக்குனராகவும், கதாநாயகனாகவும்  அறிமுகமானவர் விஜய்குமார்,  இந்த படத்தில் இவருடன் மைம் கோபி, ஹென்னா பெல்லா, சிட்டிசன் சிவகுமார் போன்ற பலர் நடித்திருந்தனர், விஜயகுமார் இந்த படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார்.  இந்த படத்திலுள்ள 'மானே மானே' பாடல் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது.  இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 2019-ல் வெளியிட்டார்.  'உறியடி-2' படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது.

மேலும் படிக்க | இவ்வளவு கோலிவுட் பிரபலங்கள் ஈசிஆர்-ல் வீடு வாங்கி உள்ளார்களா?

இந்த படங்களை தொடர்ந்து விஜய்குமார், அப்பாஸ்.ஏ.ரஹ்மந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.  கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.  இந்த செய்தி குறித்து விஜய்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.  பெயரிடப்படாத இப்படத்தின் படக்குழுவுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  இப்படத்திற்கு லீன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, கிருபாகரன் எடிட்டிங் பணியை செய்கிறார்.  படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்திற்கான போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

 

மேலும் படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்களுக்கும் வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படமும் எதிர்பார்ப்பில் உள்ளது. 'உறியடி-2' படத்திற்கு பின்னர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த 'சூரரை போற்று' படத்தின் எழுத்தாளராக விஜய்குமார் இருந்தார் என்று அந்த சமயத்தில் தகவல் வெளியானது.  அதனால் தான் இவரது மூன்றாவது படத்திற்கு கால தாமதமானது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சுதா கொங்கரா படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் துல்கர் சல்மான்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News