‘வேலைக்காரன்’: சென்னை திரையரங்கு உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் கைப்பற்றியது

Last Updated : Oct 11, 2017, 06:20 PM IST
‘வேலைக்காரன்’: சென்னை திரையரங்கு உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் கைப்பற்றியது title=

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், ‘வேலைக்காரன்’ படத்தின் சென்னை திரையரங்கு உரிமையை எஸ்பிஐ(SPI) சினிமாஸ் வாங்கியுள்ளதாக 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

 

Trending News