சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி

வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதி விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளாராம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 10, 2022, 10:54 AM IST
  • சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி
  • விக்ரம் வெற்றியால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள்
  • இந்தியில் 4 படங்களில் நடிக்க இருக்கிறாராம்
சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி  title=

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, இப்போது பான் இந்தியா ஸ்டாராக உருவாகிவிட்டார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் வில்லன் உள்ளிட்ட தனக்கு பிடித்தமான எந்த கதாப்பாத்திரத்திலும் அவர் நடிக்க தயாராக இருப்பதால் தமிழ் மொழியைக் கடந்து தெலுங்கு, இந்தி என பன்மொழித் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்து கொண்டே இருக்கிறது. அதில் தனக்கு பொருத்தமாக இருக்கும் கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | ரோலக்ஸ் சூர்யா பற்றி முதன் முதலாக மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

அண்மையில் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த அவரின் கதாப்பாத்திரம் மகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தேடி வர, அவரும் அதனை ஒப்புக் கொண்டுள்ளாராம். புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. அதேநேரத்தில் இந்தியில் 4 படங்களில் கமிட்டாகியுள்ள அவர், அந்தப் படங்களிலும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. 

விக்ரம் வேதா, மாஸ்டர், பேட்ட, விக்ரம் ஆகிய படங்கள் அவர் வில்லனாக நடித்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதால், இயக்குநர்களும் விஜய் சேதுபதியை வில்லனாக கமிட் செய்ய வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் தன்னுடைய மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப சம்பளத்தையும் கிடுகிடுவென உயர்த்தியுள்ளாராம் விஜய் சேதுபதி. பார்சி என ஹிந்தி மொழியில் உருவாகி வரும் வெப்சீரிஸில் அவர் கமிட்டாகியிருக்கிறார். அந்த வெப்சீரீஸூக்கு சுமார் 35 கோடி ரூபாய் விஜய் சேதுபதிக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதேபோல், 4 இந்திப் படங்களில் நடிக்கும் அவர், ஒரு படத்துக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பெற இருக்கிறாராம். 

ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாப்பாத்திரத்தில் ஊதியம் கிடைப்பதால், விஜய் சேதுபதியும் சட்டென ஒகே சொல்லிவிடுகிறாராம். அவரைப் பொறுத்தவரை தன்னை ஒரே கதாப்பாத்திரத்துக்குள் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை. அவரே தன்னுடைய பேட்டில் ஒன்றிலும் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த முடிவு தான், அவரை பான் இந்தியா ஸ்டாராக உருவாக்கியிருப்பது மட்டுமல்லாமல் சம்பளத்தையும் எகிற வைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

மேலும் படிக்க | ரசிகர்கள் எதிர்பார்த்த வாடிவாசல் படத்தின் அப்டேட் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News