வயசாச்சுனா லவ் பண்ணகூடாதா...பாக்கியலட்சுமி கோபி கவலை!

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 10, 2022, 12:05 PM IST
  • பாக்கியலட்சுமி சீரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது.
  • அதில் நடிக்கின்ற கோபி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
  • அவரது ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வயசாச்சுனா லவ் பண்ணகூடாதா...பாக்கியலட்சுமி கோபி கவலை! title=

திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களை களமிறங்கி பலரையும் கவர தொடங்கிவிட்டன. அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.  இரவு 08:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்ல பல ஆண் மகன்களும் அடிமை என்று கூட சொல்லலாம்.  பாக்கியாவிற்கும், எழிலுக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல கோபிக்கும் ஏரளமான ஆண் ரசிகர்கள் உள்ளனர். மனைவிக்கு தெரியாமல் முன்னாள் காதலியை சமாளித்தும், முன்னாள் காதலிக்கு தெரியாமல் மனைவியையும் குடும்பத்தையும் சமாளித்து வந்த கோபிக்கு பெரிய ஆப்பு வந்துவிட்டது.  யாருக்கு கோபியின் உண்மை தெரியாவிடக்கூடாது என கோபியின் தந்ததையும், எழிலும் மறைத்து வைத்திருந்தார்களோ அது இப்போது அம்பலமாகிவிட்டது.

baakiyalakshmi

மேலும் படிக்க | சொத்து பிரச்சனையால் தத்தளித்த சிவாஜி குடும்பம்; அந்த திருமணம் தான் காரணமா?

பாக்கியா தான் கோபியின் உண்மையான மனைவி என தெரிந்த ராதிகா, கோபியின் மீது கோபத்தில் இருக்கிறார்.  இதற்கிடையில் கோபிக்கு அடிபட்டு அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்க, அங்கு வரும் ராதிகாவை கண்ட பாக்கியாவிற்கு கோபியின் உண்மை முகம் தெரிய வருகிறது.  ஏற்கனவே ராதிகாவின் முன்னாள் கணவன் பாக்கியா வீட்டிற்கு சென்று கோபியை பற்றி சொல்லியதால் அவரது குடும்பமும் குழப்பத்தில் இருந்து வந்தது.  இந்நிலையில் பாக்கியா, மருத்துவமனையில் கோபியையும்-ராதிகாவையும் ஒன்றாக பார்த்ததால் சீரியல் சூடு பிடித்திருக்கிறது.  

baakiyalakshmi

அப்பாவியாக இருந்த பாக்கியா இப்போது கோபியை குடும்பத்தினர் முன்னிலையில் வைத்து லெஃப்ட், ரைட் வாங்கி கொண்டிருக்கிறார்.  பாக்கியா, கோபியை பிரிந்துவிடுவாரா? இல்லை ராதிகாவிடம் சண்டை போடுவாரா? குடும்பத்தினர் கோபியை வெறுப்பர்களா? என்று அடுக்கடுக்கான பல கேள்விகளுடன் இந்த சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் கோபியாக நடிக்கும் சதீஷ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'அனைவருக்கும் காலை வணக்கம், எனக்காக நேரம் எடுத்து மெசேஜ் செய்து அன்பை கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் முதலில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.  நீங்கள் எல்லாரும் கோபியை எப்படி பார்க்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாது, நான் சதீஷ் ஒரு சாதாரண மனுஷன் தான்.  அடுத்த ஒரு வாரம் கூட்னுல ஏத்தப்பட்ட குற்றவாளி தண்டனைக்கு தயாராகி கொண்டு இருக்கின்றேன்.  பாவம் கோபி என்ன பண்ணமுடியும், காதலுக்காக நிறைய பொய், பித்தலாட்டம் பண்ணிருக்கான், அனுபவிச்சு தானே ஆகணும்.  வயசாயிடுச்சுனா லவ் பண்ணகூடாதுல, அப்டிலாம் சட்டம் இருக்குல்ல என்ன பண்றது' என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்.

மேலும் படிக்க | பாலியல் உறவுக்கும் குழந்தை பெறுவதற்கும் கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம்: நடிகை தியா மிர்ஸா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News