அதிர்ச்சி! மற்றொரு வழக்கில் சித்ராவின் கணவர் கைது!!

கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ இடம் வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹேமந்த் மீது புகார் எழுந்தள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2021, 04:37 PM IST
அதிர்ச்சி! மற்றொரு வழக்கில் சித்ராவின் கணவர் கைது!! title=

நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் தூக்கிட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

சித்ராவின் (Actress chitraகணவர் ஹேமந்த் குமாரை (Hemanth Kumarதீவிர விசாரணை செய்த பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சித்ராவின் மரணம் குறித்து RTO மற்றும் காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர். 

ALSO READ | சித்ரா ஹேண்ட் பேக்கில் இருந்த முக்கிய ஆதாரம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த நிலையில் சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேமந்த் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ இடம் வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹேமந்த் மீது புகார் எழுந்த நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஹேமந்த்தை கைது செய்துள்ளனர்.

எனவே சித்ராவின் கணவர் ஹேமந்த் குமார் இரண்டாம் முறையாக கைது செய்யப்பட்டு இருப்பதால் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ | சித்ராவை போலவே இருக்கும் பிரபலத்தின் போட்டோஷூட் வைரல்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News