இந்தியா தந்தது தானம் இல்லை; கடன் உதவி: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்தியா வழங்கி வரும் உதவிகள் ‘தானம்’ அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 22, 2022, 06:40 PM IST
  • நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
  • பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
  • இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்தியா தந்தது தானம் இல்லை; கடன் உதவி: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க title=

 

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்தியா வழங்கி வரும் உதவிகள் ‘தானம்’ அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும் போது, ​​இந்தியாவில் இருந்து பெற்ற பணத்தை திரும்ப அளிக்கும் திட்டம் நம்மிடமும் இருக்க வேண்டும் என்று விக்ரமசிங்கே கூறினார். இலங்கை தற்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில், 'இந்திய கடன் உதவியின் கீழ் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெற்றுள்ளோம். அதிக கடன் உதவியை மேலும் வழங்க வேண்டும் என இந்திய சகாக்களிடம் கோரியுள்ளோம். ஆனால் இந்தியாவும் தொடர்ந்து எங்களை ஆதரிக்க முடியாது. அவர்களின் உதவிக்குக் கூட எல்லை உண்டு. மறுபுறம், இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டமும் நம்மிடம் இருக்க வேண்டும். இவை தானம் அல்ல.

மோசமாகி வரும் இலங்கை நிலை

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் நாடாளுமன்றத்தில் விளக்கினார். உள்ளூர் பொருளாதார நிலைமைகளை மதிப்பிடுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உயர் அதிகாரிகள் குழு வியாழன் அன்று கொழும்பு சென்றடைய உள்ளதாக இலங்கை பிரதமர் தெரிவித்தார். எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறையை விட மிகவும் மோசமான நிலைமையை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளதாக விக்கிரமசிங்க கூறினார்.

பொருளாதார வீழ்ச்சி

ரணில் விக்கிரமசிங்க, 'பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுவே இன்று நம் முன் உள்ள மிகத் தீவிரமான பிரச்சினை. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். இதைச் செய்ய, அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியை நாம் முதலில் தீர்க்க வேண்டும். இலங்கையின் ஒரே நம்பிக்கை சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டுமே உள்ளது என்றும் விக்கிரமசிங்க கூறினார்.

அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு

இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக உணவு, மருந்து, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து நிதி உதவி கிடைத்தாலும், இலங்கையில் பொருளாதார நெருக்கடி இன்னும் தொடர்கிறது. மேலும் அது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை எதிர்பார்க்கிறது.

மேலும் படிக்க | தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் நிவாரண பொருட்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News