சுகர் அதிகமா இருக்கா? காலை எழுந்தவுன் கட்டாயம் இதை செய்யுங்கள்

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது மிகவும் கடினமான பணியாகும், இதற்கு ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது, ஆனால் சில உடற்பயிற்சிகளும் அவசியம். நமது அன்றாட வாழ்வில் ஒருசில மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு போன்ற சிக்கலான நோயிலும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். நீரிழிவு நோயாளிகள் தூங்கி எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1 /5

நீரிழிவு நோயாளிகளுக்கு காலை வேலை நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. காலை நடைப்பயிற்சி என்பது உடலை சுறுசுறுப்பாக வைத்து இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும்.

2 /5

காலை உணவைத் தவிர்க்க நினைக்காதீர்கள், காலையில் ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடுங்கள். எண்ணெய் உணவுகள் மற்றும் இனிப்புகளைத் தவிர்க்கவும், இல்லையெனில் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்.

3 /5

நீரிழிவு நோயால் கால் பிரச்சனையும் ஏற்படலாம், எனவே காலையில் எழுந்து பாதங்களைப் பார்ப்பது அவசியம். பாதங்கள் அல்லது நகங்களின் நிறம் மாறினால், கொப்புளங்கள் அல்லது புண்கள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

4 /5

நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் எழுந்து இரத்த சர்க்கரை பரிசோதனை செய்ய வேண்டும், இதற்காக சந்தையில் ஏராளமான குளுக்கோமீட்டர்கள் உள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் சர்க்கரை அதிகரிப்பைத் தவிர்க்கலாம்.

5 /5

காலையில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் குடலை சுத்தப்படுத்துகிறது மற்றும் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.