இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! என்ன செய்ய போகிறது ரோஹித் & கோ?

பங்களாதேஷ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்தியாவை வெளியேற்றி தென்னாப்பிரிக்கா இடம் பெற வாய்ப்புள்ளது.

 

1 /6

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.    

2 /6

முதல் டெஸ்டில் இந்திய தோல்வியடைந்த நிலையில், 2வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கி உள்ளது. மேலும் 2025ம் ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதையும் மனதில் வைத்துள்ளது.  

3 /6

இதற்கு முன்பு நடந்த 2 சுழற்சிகளிலும் இந்தியா இறுதி போட்டிக்கு சென்று தோல்வியடைந்தது. இந்நிலையில்  2025 உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு நுழைவதில் இந்தியாவிற்கு புதிய சிக்கல் வந்துள்ளது.  

4 /6

பங்களாதேஷ்க்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, தென்னாப்பிரிக்கா அணியும் இந்த போட்டியில் இணைந்துள்ளது. அவர்களுக்கு இன்னும் ஒரு அவே போட்டி தான் உள்ளது, அதே சமயம் 5 டெஸ்ட் போட்டிகள் சொந்த மண்ணில் நடைபெற உள்ளது.  

5 /6

சொந்த மண்ணில் அவர்களை தோற்கடிப்பது கடினம் என்பதால் இந்த போட்டிகள் அனைத்திலும் தென்னாபிரிக்கா வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் வெற்றி பெற்றால் 69.44 PCT புள்ளிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இடம் பெறுவார்கள்.  

6 /6

இந்திய அணி தகுதி பெற நியூசிலாந்து தொடரை வெல்ல வேண்டும். மேலும் ஆஸ்திரேலியாவில் குறைந்தது 2 டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். இதனை செய்ய தவறினால் ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு எளிதாக தகுதி பெற்றுவிடும்.