ரோகித் சர்மா இருக்கும் வரை இனி இந்த பிளேயருக்கு இந்திய அணியில் வாய்ப்பில்லை

Rohit Sharma | ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் வரை இந்திய அணியில் ஸ்டார் பிளேயர் ஒருவருக்கு இனி வாய்ப்பு கிடைக்காது.

Rohit Sharma News | இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, ஒரு ஸ்டார் பிளேயருக்கு மட்டும் இனி வாய்ப்பு கொடுக்கமாட்டார்.

 

1 /8

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கேஎல் ராகுலுக்கும் இடையே பனிப்போர் ஓடிக் கொண்டிருக்கிறது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை வரை இந்திய அணியில் தட்டுத்தடுமாறி இடம்பிடித்துக் கொண்டிருந்த கே.எல் ராகுல் அதன்பிறகு முழுமையாக ஓரங்கட்டப்பட்டார்.  

2 /8

அவருக்கு கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு கொடுப்பதே இல்லை. ரிஷப் பந்துக்கு மட்டுமே இந்திய அணியில் முழு முன்னுரிமை கொடுக்கிறார். கடந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்குக்கூட கேஎல் ராகுலை  ரோகித் சர்மா தேர்வு செய்யவில்லை.  

3 /8

இது குறித்து பேசிய கேஎல் ராகுல், இந்திய  அணியில் இருக்கும் அரசியல் நிஜ அரசியலை விட பெரியது. அதனை முழுமையாக எல்லாம் வெளிப்படையாக பேச முடியாது என கூறியிருந்தார். அதாவது கடந்த ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருந்தபோது இதனை கூறியிருந்தார்.  

4 /8

அப்போதே அவருக்கு தெரிந்துவிட்டது, டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணயில் இடம்பெற மாட்டோம் என்று. இருப்பினும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கம்பீர் தான் இப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.  

5 /8

அவர் வந்தபிறகு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் பெயரை இடம்பெற செய்கிறார். இருப்பினும் அந்த வாய்ப்புகளை ராகுல் வீணடித்துவிடுவதால், உடனே இந்திய அணியில் இருந்து தூக்கியடிக்கப்படுகிறார்.   

6 /8

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ராகுல் இடம்பிடித்திருந்தார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவருடைய பேட்டிங் சரியில்லை என்றவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உடனடியாக பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.  

7 /8

இதனால் அதிருப்தியின் உச்சத்தில் இருக்கிறார் கே.எல்.ராகுல். ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பில்லை என ராகுலே தெரிந்து வைத்திருக்கிறார். 

8 /8

ரோகித் சர்மாவுக்கு ராகுல் மீது என்ன கோபம் என தெரியவில்லை. அவரை விட ரிஷப் பந்துக்கே முக்கியத்துவம் கொடுத்து இந்திய அணியில் சேர்க்கிறார். கேஎல் ராகுலும் தனக்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.