சனி பகவானின் வக்ர பெயர்ச்சியால் பெரும் நஷ்டத்தை சந்திக்கப்போகும் ராசிகள்

சனி வக்ர பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சனி மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாகும். இது ஜூன் 5 முதல் பிற்போக்கு நகர்வில் உள்ளது. 141 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 23, 2022 வரை சனி பிற்போக்கு நிலையில் இருக்கும். சனியின் வக்ர பெயர்ச்சி, அதாவது பிற்போக்கு நகர்வு காரணமாக, 5 ராசிக்காரர்கள் பெரும் பண இழப்பை சந்திக்க நேரிடும். நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ள 5 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /5

மேஷ ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். புதிய முதலீடுகளில் சில நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போட்டித் தேர்விலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். 

2 /5

திடீரென்று சில நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் கூடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலையும் கிடைக்கும். சுப காரியங்களுக்காக பணம் செலவழிக்கப்படும். வெளிநாடு செல்லும் திட்டமும் உருவாகும். முதலீடு செய்ய இது நல்ல நேரம்.

3 /5

இந்த காலத்தில் மகர ராசிக்காரர்கள் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் திரும்பப் பெறுவதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். 

4 /5

திடீர் உடல்நலக் கோளாறுகள் வரலாம். மனதில் பதற்றம், அமைதியின்மை போன்றவையும் ஏற்படலாம். திடீர் செலவு அதிகரிப்பாலும் பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் போட்டுவைத்த வரவுசெலவுத் திட்டத்தைத் தாண்டி செலவுகள் அதிகரிக்கலாம். இது முதலீடு செய்வதற்கு உகந்த நேரம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

5 /5

திடீர் செலவுகள் வரக்கூடும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். வெளிநாடு செல்லும்போது விசா பிரச்சனைகளும் வரலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். முடிந்தவரை கடல் பயணத்தைத் தவிர்க்கவும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )