சனியின் மாற்றத்தால் இந்த ராசிகளின் வாழ்வில் எழுச்சி, பணக்கார யோகம்

Shani Nakshatra Gochar: ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். மார்ச் 15 ஆம் தேதி, சனி பகவான் முற்பகல் 11.40 மணிக்கு சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பெயர்ச்சியானார். இங்கே அவர் 17 அக்டோபர் 2023 வரை தங்குவார். ராகு சதய நட்சத்திரத்தின் அதிபதி ஆவார். சனி பகவானை கண்டு அனைவரும் அச்சப்பட்டாலும், அவர் எப்போதும் அசுப பலன்களைத் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனி பகவானின் நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரும். சனியின் நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். சதய நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.   

 

1 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு பணக்கார யோகம் உருவாகும். இந்த பெயர்ச்சியின் காரணத்தால் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

2 /7

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் மகாபாக்ய ராஜயோகம் உருவாகும். இது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான மற்றும் நல்ல பலன்களை அளிக்கும். ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பெரிய சாதனைகளைச் செய்வார்கள்.

3 /7

மிதுன ராசிக்காரர்கள் வாய்ப்புகளை நழுவ விடாமல் கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாகப் படிப்பு, வேலை தொடர்பான கனவில் இருப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும்.  

4 /7

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றம் சிறப்பான பலன்களைத் தரும். பண வகையில் பல நன்மைகள் உண்டாகும். சதய நட்சத்திரத்தில் சனி இருப்பது இடமாற்றம், வெற்றி மற்றும் வேலையில் வெற்றிகளை கிடைக்கச்செய்யும். 

5 /7

வியாபாரம் செய்யும் துலா ராசிக்காரர்களுக்கு பொருளாதார லாபம் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்காக குறுக்குவழிகளை கடைபிடிக்காதீர்கள். இழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன, ஆகையால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  

6 /7

சனியின் நட்சத்திர மாற்றத்தால் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். இடமாற்றம் மற்றும் சம்பள உயர்வும் கூடும். அனைத்து துறைகளிலும் வெற்றி உங்களைத் தேடி வரும்.

7 /7

சனி நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் தொடங்கும் வேலை நீண்ட கால பலனைத் தரும்.