அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள்!

ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை பரிந்துரைக்கும் அதே வேளையில், அதிக தண்ணீர் குடிப்பது உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

 

1 /5

அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் உடலில் திரவம் வழிதல் மற்றும் சமநிலையின்மை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.  அதிகப்படியான நீர் உடலின் உப்பு அளவைக் குறைத்து, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு, சோர்வு மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்தும்.  இதற்கு ஹைபோநெட்ரீமியா என்று பெயர்.  

2 /5

அதிக தண்ணீர் குடிக்கும் போது எலக்ட்ரோலைட் அளவு குறைகிறது, மேலும் சமநிலை அசைகிறது.  எலக்ட்ரோலைட் அளவு குறைவாக இருக்கும்போது தசை வலி மற்றும் பிடிப்புகள் போன்றவை ஏற்படுகிறது.  

3 /5

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் பணி அதிகரித்து ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வீட்டிலோ, வேலையிலோ அல்லது பள்ளியிலோ சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும், இது மிகவும் சிரமமாக இருக்கும்.   

4 /5

அதிகப்படியான தண்ணீரை உட்கொள்வது உடலை சோர்வு அடைய ஏற்படுத்தும்.  அதிக தண்ணீர் குடித்தால், சிறுநீரகங்கள் அதிகமாக வேலை செய்யும், இதனால் சில ஹார்மோன்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உடலையும், மனதையும் சோர்வடையச் செய்யும்.  

5 /5

பல நாடுகளில் குழாய் நீரை சுத்தப்படுத்த குளோரின் பயன்படுத்தப்படுகிறது.  அதிக குளோரினேட்டட் தண்ணீரை நீண்ட காலத்திற்கு உட்கொள்வது சிறுநீர்ப்பை மற்றும் டெஸ்டிகுலர் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.