நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ

Viral Video: தற்போது வைரல் ஆகும் ஒரு வீடியோவில், ஒருவர் பாம்பின் வெப்பம் தணிக்க சாவகாசமாக அதன் மீது தண்ணீர் ஊற்றுவதை காண முடிகின்றது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 29, 2022, 06:08 PM IST
  • பாம்பின் வெப்பம் தணித்த நபர்.
  • அசையாமல் காண்பித்த பாம்பு.
  • வைரல் ஆன வீடியோ.
நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும்.  பாம்பை பார்த்தால் அனைவரும் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடவே எண்ணுவார்கள். அதுவும் நாகப்பாம்பு என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், தற்போது வைரல் ஆகும் ஒரு வீடியோவில், ஒருவர் சாவகாசமாக பாம்பின் வெப்பம் தணிக்க அதன் மீது தண்ணீர் ஊற்றுவதை காண முடிகின்றது. 

இந்த நாட்களில் நாட்டின் பல மாநிலங்களில் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகிறது. வெப்பத்திலிருந்து தப்பிக்க அனைவரும் பல வித உபாயங்களை தேடுகிறோம். அதே போல், கோடை காலத்தில் தங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க விலங்குகள் நீர்நிலைகளுக்கு அருகிலேயே இருப்பதையும் காண்கிறோம். 

மேலும் படிக்க | Viral Video: அல்லு அர்ஜூனின் ‘ஸ்ரீவல்லி’ காய்ச்சல் கொரில்லாவையும் விட்டு வைக்கவில்லை..!! 

சமீபகாலங்களில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் வெயிலில் இருந்து தப்பிக்க ஒரு வீட்டின் அருகே உள்ள தண்ணீர் குழாயின் அருகே ஒரு நாகப்பாம்பு வருவதை காண முடிகின்றது. வெப்பம் தாங்காமல் தண்ணீர் தேடி பாம்பு அங்கு வந்திருப்பதை பார்த்த ஒரு நபர் அதற்கு உதவ முன்வருகிறார். இது மிகவும் அபூர்வமான ஒரு விஷயமாகும்.

நம்மில் பலர் பாம்பை பார்த்தாலே ஓட்டம்தான் பிடிப்போம். இந்த நிலையில், ஒருவர், தண்ணீர் தேடி வந்த பாம்புக்கு உதவ நினைத்ததோடு மட்டுமல்லாமல், அதன் அருகில் சென்று அதன் வெப்பத்தை தணிக்க அதன் மீது தண்ணீர் ஊற்றுவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இதைப் பார்த்த இணையவாசிகளுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுகின்றது. 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், வழக்கமாக கோபமாக இருக்கும் ராஜநாகத்தை தண்ணீர் ஊற்றி ஒரு நபர் அமைதிப்படுத்துவதை காண முடிகின்றது. அந்த நபர் ராஜநாகத்தின் மிக அருகில் சென்று, அதன் தலை மீது நீர் ஊற்றுகிறார். 

அதிசயிக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பயனர்கள் பலவிதமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றன. 

மேலும் படிக்க | மணமகள் குத்தாட்டம் போட, மணமகன் குழம்பி நிற்க, வைரலான வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News