இனமென பிரிந்தது போதும்... தண்ணீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய மக்கள்!

தண்ணீருக்குள் சிக்கி தப்பிக்க வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த நாயை அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு நாயை பத்திரமாக மீட்டெடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 4, 2022, 10:58 AM IST
  • தண்ணீரில் மாட்டிக்கொண்ட நாய்.
  • போராடி காப்பாற்றிய மக்கள்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
இனமென பிரிந்தது போதும்... தண்ணீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய மக்கள்! title=

இணையத்தில் நிரம்பியுள்ள பல விஷயங்கள் எப்படி நம்மை மகிழ்விக்கிறதோ, அறிவை புகட்டுகிறதோ அதேபோல சில விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.  இன்றைய சூழலில் பலரும் இணைய உலகில் மூழ்கி கிடக்கிறோம், ஒருபுறம் அவை தவறானது என்று கருதப்பட்டாலும் மறுபுறம் இது நமக்கு உலகெங்கிலும் அரங்கேறும் பல சுவாரஸ்யமான சம்பவங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.  அவ்வாறு நாம் பார்க்கும் சில காட்சிகள் பலரது இதயங்களையும் கவர்ந்து வைரலாகி விடுகிறது, அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள ஒரு காட்சி பலரின் மனங்களையும் வென்றதோடு, நல்லதொரு மனிதாபிமானத்தையும் விதைத்து வருவதாக அமைந்திருக்கிறது.  

மேலும் படிக்க | மனைவியின் ஓவர் பாசம், சிக்கி சின்னாபின்னமான கணவன்: வைரல் வீடியோ

சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒன்றான ட்விட்டரின் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் தான் அந்த மனிதநேயத்தை ஊக்குவிக்கும் காட்சி பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் பாலத்தின் அடியில் ஓடிக்கொண்டிருக்கும் நீரினுள் நாய்க்குட்டி ஒன்று மாட்டிக்கொள்கிறது, அந்த பாலத்தின் இடையே உள்ள ஒரு ஓட்டைக்குள் அந்த நாய் பயந்து நின்றுகொண்டு தப்பிக்க வழிதெரியாமல் தவித்துக்கொண்டு நீரில் தத்தளித்து நிற்கிறது.  உடனே அப்பகுதி மக்கள் நாயை காப்பாத்த நாய் ஏறுவதற்கு வாகாக ஒரு கூடையில் கயிறை கட்டி அதனை அந்த தண்ணீரில் நாய்க்கு அருகே கொண்டு செல்கின்றனர்.  உடனே அந்த நாயும் சரியாக அந்த கூடையினுள் ஏறி அமர்ந்ந்துகொள்கிறது, கூடையினுள் நாய் ஏறியதை உறுதிசெய்த அந்த நபர்கள் வேகமாக அந்த கூடையிலிருக்கும் நாயை மேலே இழுத்து தரையில் விடுகின்றனர்.  தண்ணீரிலிருந்து வெளியே வந்ததும் அந்த நாய் தன் மேலே உள்ள நீரை உதறிவிட்டு நகர்கிறது, மீண்டும் அது நீரில் விழுந்திடாத வண்ணம் அவர்கள் நாயை பாதுகாக்கின்றனர்.

 

நாயை மீட்டெடுத்த பிறகும், அவர்கள் நாயை பாதுகாக்க நினைப்பது இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்து வருகின்றனர், இந்த வீடியோவிற்கு ஏழாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | 'ஆரம்பமே இப்படியா?' சொதப்பிய மணமகன், கடுப்பான மணமகள்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News