பௌலரை பேட்டால் அடிக்க பாய்ந்த வீரர்... இறுதிப்போட்டியில் நடந்த மோதல் சம்பவம் - வைரல் வீடியோ

Cricket Viral Video: இறுதிப்போட்டியில் எதிர் எதிர் அணிகளை சேர்ந்த இரு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 29, 2024, 07:48 PM IST
  • பௌலரை ஒருவர் பேட்டால் தாக்க முற்பட்டார்.
  • இந்த வீடியோ X தளத்தில் வைரலாகி வருகிறது.
  • கடந்த 25ஆம் தேதி இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
பௌலரை பேட்டால் அடிக்க பாய்ந்த வீரர்... இறுதிப்போட்டியில் நடந்த மோதல் சம்பவம் - வைரல் வீடியோ title=

Cricket Viral Video: கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு என்றழைக்கப்படுவது உண்டு. இருப்பினும் அது பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளருக்கும் இடையே நடைபெறும் உளவியல் ரீதியான மோதல் ஆகும், இதுதான் கிரிக்கெட்டின் அடிப்படை கூறுகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. 

தோனி போன்று அனைவரும் கூலாக இருக்க வேண்டும் என நினைப்பதும் தவறு. அதேபோல், விராட் கோலி ஆக்ரோஷமாக செயல்படுவதை தூற்றுவதும் தவறு. இருவரும் அவரவர் இயல்புகளில் அந்த விளையாட்டு அணுகுகிறார்கள். இருவருக்கும் அதன் எல்லை என்ன என்பது தெரியும். காரணம் அவர்கள் முதிர்ச்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆவார்கள். 

களத்தில் மோதும் வீரர்கள்

ஆனால் சில கிரிக்கெட் வீரர்கள் எல்லை மீறி செல்வதால் களத்தில் பெரிய பிரச்னையே ஏற்படும். கிரிக்கெட் வரலாற்றில் அதுபோன்ற பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். ஐபிஎல் தொடரில் கூட மிட்செல் ஸ்டார்க்கை நோக்கி, கைரன் பொல்லார்ட் பேட்டை வீச முயன்ற சம்பவம் இன்றும் பலருக்கும் பார்க்கவே மிரட்சியை தரும். அந்த வகையில், தற்போது கிரிக்கெட் களத்தில் வீரர்கள் சண்டையிடும் வீடியோ வைரலாகி உள்ளது. 

மேலும் படிக்க | அந்தரத்தில் ஆபத்தாக புஷ்-அப் செய்யும் இளைஞர்! பார்த்தாலே பக்-பக்..வைரல் வீடியோ..

வைரலாகி வரும் வீடியோ

ஐக்கிய அரபு அமீரகத்தில்  MCC Weekdays Bash XIX என்ற கிளப் அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெற்றது. கடந்த வாரம் இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் Aerovisa Cricket அணியும், Rabdan Cricket Club அணியும் மோதின. இதில் யார் வெற்றி பெற்றார் என்பது அல்ல செய்தி... அந்த இறுதிப்போட்டியில் இந்த அணிகளின் இரு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த சம்பவத்தின் வீடியோ பார்ப்போரை பதறவைக்கிறது. Aerovisa Cricket அணியின் பந்துவீச்சாளர் நசிர் அலி, Rabdan Cricket Club அணியின் பேட்டர் காசிஃப் முகமது ஆகியோர்தான் ஆடுகளத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அவர்கள் ஆடுகளத்திலேயே மோதிய உடன் சக வீரர்களும், நடுவர்களும் அவர்களை விலக்கிவிட முயன்றாலும் இருவரும் ஆக்ரோஷமாக சீறிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 

நடந்தது என்ன?

இதுகுறித்து வெளியான தகவலின்படி, இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் Aerovisa Cricket அணியின் நசிர் அலி 13ஆவது ஓவரின் கடைசி பந்தை வீசினார். அந்த பந்தில் Rabdan Cricket Club அணியின் காசிஃப் முகமது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நசிர் அலி அந்த விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடினார். காசிஃப் முகமது ஆடுகளத்தை விட்டு புறப்பட்டபோது நசிர் அலி அவரை நோக்கி ஏதோ சொல்லிவிட உடனே காசிஃப் முகமது நசிர் அலியை தாக்க தொடங்கினார். 

இவரும் மாறி மாறித் தாக்கிக்கொண்டனர். வீரர்கள் அவர்கள் இருவரையும் போராடி விலகிவிட்டனர். அப்போது வெளியில் இருந்து வந்த ஒருவரை நசிர் அலி கீழே கிடந்த பேட்டை எடுத்து தாக்க, உடனே அந்த வீரரும் பேட்டை எடுத்து நசிர் அலி மீது ஓங்கி அடிக்க பாய்ந்தார். நல்வாய்ப்பாக அதனை மற்ற வீரர்கள் தடுத்தனர். இந்த மோதலின் காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ X தளத்தில் கடந்த செப். 25ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கோவிலில் உண்டியல் காணிக்கையை திருடும் நபர்! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News