’பாம்புகளின் ரொமான்ஸ்’ புழுதிக்காட்டில் கேமராவில் சிக்கிய காதல் விளையாட்டு: வீடியோ

ஒசூர் அருகே வயலில் பின்னிப் பிணைந்து நடனமாடிய பாம்புகளை பார்த்து கிராம மக்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2023, 08:38 PM IST
  • பாம்புகளின் வீடியோ வைரல்
  • விளைநிலத்தில் காதல் ரொமான்ஸ்
  • ஓசூரில் கேமராவில் சிக்கிய பாம்புகள்
’பாம்புகளின் ரொமான்ஸ்’ புழுதிக்காட்டில் கேமராவில் சிக்கிய காதல் விளையாட்டு: வீடியோ title=

பாம்புகளை பார்த்தவுடன் மக்களுக்கு முதலில் பயம் தான் வரும். அதனை அன்பாக எல்லாம் எண்ணமாட்டர்கள். ஆனால், பாம்புகளை பொறுத்தவரை அது ஆபத்து என்று உணர்ந்தால் தப்பிக்க மட்டுமே பார்க்கும். யாரையும் தாக்க வேண்டும் என்று நினைக்காது. தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே பாம்பு பிறரை தாக்கவோ அல்லது கொத்தவோ முற்படும். இந்த விஷயம் பொதுவாக மக்களுக்கு தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் வசிக்கும் இடங்களில் பாம்பு வந்துவிட்டால், அதனை அடித்து கொல்ல வேண்டும் என்று மட்டுமே நினைப்பார்கள். ஆனால், அது தவறு. பாம்புகளை பார்த்தால் அதனை பிடித்து பத்திரமாக வனப்பகுதிகளில் விட்டுவிட வேண்டும். இங்கு படைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு உயிரினமும் சூழலியல் சமத்துவத்துக்காக உள்ளவை.

அதில் ஏற்படும் மாற்றங்கள் ஒட்டுமொத்த சூழலியலையும் பாதிக்கும். பாம்புகளை பார்த்தால் யாரும் அடிக்கக்கூடாது. உங்களால் பிடிக்க முடியவில்லை என்றால் உடனியாக அருகில் இருக்கும் தீயணைப்புத்துறை அல்லது நிபுணர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அரசு அலுவர்களுக்கு தகவல் கொடுத்தால் கூட அவர்கள் முறைப்படி பாம்புகளை பிடிக்க ஏற்பாடு செய்துவிடுவார்கள். நிபுணத்துவம் இல்லாமல் பாம்புகளை பிடிக்க முற்பட்டால் ஆபத்தில் கூட முடிய வாய்ப்புகள் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க பாம்புகளுக்கு மகிழ்ச்சியான பக்கம் ஒன்று இருக்கிறது.

மேலும் படிக்க | ஆத்தாடி..3 சிறுவர்களை விழுங்க முயற்சித்த நீர்யானை: ஷாக்கிங் வைரல் வீடியோ

அவை தன் ஜோடிகளுக்குள் அவ்வப்போது ஜாலியாக விளையாடும். இப்படியான காட்சிகள் எப்போதுதாவது கண்ணில் சிக்குவதுண்டு. சிலர் அதனை தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாக்களில் வெளியிடுவார்கள். அப்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோ தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியில் எடுக்கபட்டது. உளியாளம் கிராமத்தின் குடியிருப்பு வீடுகளுக்கு அருகே விளைநிலத்தில் சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டு இருந்தது. 

சிறிது நேரத்தில் அதனை தேடி நாகப்பாம்பு ஒன்று  வந்தது. பின்பு அவைகள் இரண்டும் பின்னிப் பிணைந்த நிலையில் நடனமாடின.பாம்புகள் பின்னி பிணைந்து இருக்கும் தகவல் பரவியது. அங்கு வந்த பொதுமக்கள் அச்சத்துடன் அவைகளை பார்த்தனர். ஒரு சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சுமார் 20 நிமிடம் அங்கிருந்த பாம்புகள் பின்னர் புதருக்குள் சென்று மறைந்தன. இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | 'அது நானா...இல்லையா?’-ஆடு செய்யும் அலப்பறை.. அடக்க முடியாம சிரிப்பீங்க: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News