மார்ச் 15ம் தேதிக்குள் இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும்

Surya Gochar In Kumbh: வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, எந்த ஒரு கிரகத்தின் பெயர்ச்சியும் 12 ராசிகளுக்கும் அசுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதன்படி பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் நுழைந்தார். இதன் போது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 20, 2023, 11:37 AM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு மரியாதை கூடும்.
  • அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • சூரியன் கும்ப ராசிக்குள் நுழைவது சுப பலன்களைத் தரும்.
மார்ச் 15ம் தேதிக்குள் இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும் title=

சூரியப் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில் கிரக ராசி மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் சூரியன் தனது ராசியை மாற்றிக்கொள்ளும். அந்த வகையில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி சூரியன் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்குள் பெயரச்சியாடந்தார் சூரிய பகவான். இத்தகைய சூழ்நிலையில், பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மற்றும் எதிர்மறையான விளைவுகள் காணப்படும். ஆனால் இந்த காலத்தில் 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி பலன் தரும்

கன்னி ராசி: ஜோதிட சாஸ்திரத்தின்படி, பல ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். இவர்களில் கன்னி ராசிக்காரர்களும் அடங்குவர். இதன் போது இந்த ராசிக்காரர்களுக்கு மரியாதை கூடும். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் எதிரிகளை புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்த முடியும். அதே சமயம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும்.

மேலும் படிக்க | சனி உதயம்: 5 மார்ச் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், அதிர்ஷ்ட மழை பொழியும்

தனுசு ராசி: ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் கும்ப ராசியில் பெயர்ச்சியடைவது தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் புதிய வணிகத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், இந்த காலம் சாதகமாக அமையும். தந்தையின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியன் கும்ப ராசிக்குள் நுழைவது சுப பலன்களைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் மற்றொரு நிறுவனத்திலிருந்து புதிய சலுகையைப் பெறலாம். மறுபுறம், வேலை தேடுபவர்கள் சூரியனின் சஞ்சாரத்தின் போது நல்ல செய்திகளை கிடைக்கலாம். தொழில், வியாபாரம் போன்றவற்றில் தொடர்புடையவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். இதனுடன் இவர்களுக்கு சமூகத்தில் மரியாதை கூடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்! இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News